ஓமலுார்; இந்திரனின் கோபத்தில் இருந்து காக்க, கிருஷ்ணர், கோவர்தன மலையை துாக்கியதன் நினைவாக, சேலம் மாவட்டம் கருப்பூர் இஸ்கான் கோவிலில் கோவர்தன பூஜை நேற்று நடந்தது. காலையில் பஜனை, கோவர்தன லீலை, ஆரத்தி, கீர்த்தனம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் கிருஷ்ணன், பலராமன் அருள்பாலித்தனர். மதியம் பக்தர்களுக்கு பிரசாத விருந்து வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.