Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இஸ்கான் கோவிலில் கோவர்தன பூஜை திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் கந்த சஷ்டி உற்சவம் விமரிசை திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்செந்துாரில் கந்தசஷ்டி: தங்க சப்பரத்தில் சுவாமி தரிசனம்
எழுத்தின் அளவு:
திருச்செந்துாரில் கந்தசஷ்டி: தங்க சப்பரத்தில் சுவாமி தரிசனம்

பதிவு செய்த நாள்

15 நவ
2023
12:11

திருச்செந்துார்: திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், கந்தசஷ்டி விழா இரண்டாம் நாளான நேற்று, சுவாமி ஜெயந்திநாதர் தங்க சப்பரத்தில் எழுந்து அருள்பாலித்தார். திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், கந்த சஷ்டி திருவிழா நேற்று முன்தினம் கோலாகலமாக துவங்கியது. இரண்டாம் நாளான நேற்று அதிகாலை 3:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 3:30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 5:00 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் அதைத்தொடர்ந்து காலபூஜைகள் நடந்தன. பின், ஜெயந்திநாதர் யாக சாலையில் எழுந்தருளினார். யாகசாலையில் சுவாமி ஜெயந்திநாதருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது. மதியம் உச்சிக்கால தீபாராதனை முடிந்தவுடன் சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி – தெய்வானையுடன் தங்கச்சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்கள் வேல்வகுப்பு, வீரவாள் வகுப்பு பாடல் பாட சண்முகவிலாசம் மண்டபத்துக்கு வந்தடைந்தார். மாலை , திருவாவடுதுறை ஆதீன சஷ்டிமண்டபத்தில் சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம் நடந்து சுவாமி தங்க சப்பரத்தில் எழுந்து வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 


கந்த சஷ்டி மூன்றாம் நாளான இன்று அதிகாலை 3: 00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, சிறப்பு அபிஷேகம் மற்றும் காலபூஜைகள் நடைபெற்றது. வரும்18ம் தேதி மாலை 4:00 மணிக்கு கடற்கரையில் சூரசம்ஹார நிகழ்ச்சி நடக்கிறது. மறுநாள் திருக்கல்யாண வைபவத்தை முன்னிட்டு அதிகாலை 5:00 மணிக்கு அம்பாள் தபசு காட்சிக்கு புறப்பாடும், மாலை 5:00 மணிக்கு சுவாமி, அம்பாள் தோள்மாலை மாற்றும் நிகழ்ச்சியும், இரவு திருக்கல்யாண வைபவமும் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: சிருங்கேரி சாரதா பீடத்தின் இளைய சங்கராச்சாரியார் ஜகத்குரு ஸ்ரீ விதுசேகர பாரதீ ... மேலும்
 
temple news
பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூரில் சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம் ஏற்பாடு செய்திருந்த சுவர்ண பாரதி ... மேலும்
 
temple news
பெங்களூரு: கர்நாடக மாநிலத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் வற்றாத ஜீவநதியாக சலசலத்து ஓடிக் ... மேலும்
 
temple news
கிட்டத்தட்ட 1,200 ஆண்டுகளுக்கு முன் கேரள மாநிலத்தில் பூர்ணா நதிக்கரையில் காலடி எனும் அழகிய கிராமத்தில் ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண விழாவையொட்டி இன்று 9ம் நாளில் காந்திமதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar