16 அடி உயர பாலமுருகனுக்கு புனித நீர் ஊற்றி சிறப்பு அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15நவ 2023 02:11
கீழக்கரை: கீழக்கரை கிழக்கு புதுநகர், பாலமுருகன் கோயிலில் கடந்த செப். 27ம் தேதி அன்று கும்பாபிஷேகம் நடந்தது. பின் 48 நாட்கள் தொடர்ந்து சிறப்பு அபிஷேக அலங்காரங்கள் செய்து 48 வது நாளான இன்று மண்டலாபிஷேக நிறைவு விழா நடைபெற்றது. விழா நிறைவை முன்னிட்டு இன்று காலை 10:00 மணியளவில் சித்தி விநாயகர், பாலமுருகன், கருப்பண்ணசாமி, முனியசாமி, நவகிரகம், இடும்பன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு யாகசாலையில் இருந்து புனித நீர் ஊற்றி சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. மகா மண்டபத்தின் மேல் 16 அடி உயரம் உள்ள பாலமுருகன் சிலைக்கு புனித நீர் ஊற்றப்பட்டு, சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பூஜைகளை ஆர்.எஸ்.மங்கலம் மணிகண்ட குருக்கள் குழுவினர் செய்திருந்தனர். பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகி முனியசாமி மற்றும் கிழக்கு புதுநகர் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.