திருச்செந்தூர் கடற்கரையில் மணலில் சிவலிங்கம் செய்து வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15நவ 2023 04:11
திருச்செந்தூர் : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில், உலக மக்கள் அனைவரும் நலமாக வாழ வேண்டியும், நல்ல பருவ மழை பெய்ய வேண்டியும், மணலால் சிவலிங்கம் செய்து பக்தர்கள் வழிபட்டனர். தீர்த்தமலை வைத்தியலிங்க சுவாமி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.