வடவள்ளி: மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழாவின் இரண்டாம் நாளில், சூரியபிரபை வாகனத்தில் சுப்பிரமணியசுவாமி எழுந்தருளினார்.
முருகனின் ஏழாம் படை வீடாக மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் கருதப்படுகிறது. இக்கோவிலில் கந்தசஷ்டி விழா, காப்பு கட்டுதலுடன் நேற்று துவங்கியது. இரண்டாம் நாளான இன்று அதிகாலை, 5:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, சுப்பிரமணிய சுவாமிக்கு, 16 வகையான திரவியங்கள் கொண்டு அபிஷேகம் நடந்தது. காலை 6:00 மணிக்கு சுப்பிரமணியசுவாமி ராஜ அலங்காரத்தில் காட்சியளித்தார். தொடர்ந்து யாகசாலை பூஜை, சத்ரு சம்ஹார திரிசதி அர்ச்சனை நடந்தது. பகல், 12:00 மணிக்கு சுப்பிரமணியசுவாமி சூரிய பிரபை வாகனத்திலும், மாலையில் ஆட்டுக்கிடாய் வாகனத்திலும் எழுந்தருளி திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளாமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.