Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 36 அகல் விளக்கு வைத்து பத்மாசனம் ... திருச்செந்தூரில் திருக்கல்யாணம் கோலாகலம்; மொய் எழுதி பக்தர்கள் வழிபாடு திருச்செந்தூரில் திருக்கல்யாணம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலையில் பம்பை முதல் சன்னிதானம் வரை 1400 போலீஸ் பாதுகாப்பு
எழுத்தின் அளவு:
சபரிமலையில் பம்பை முதல் சன்னிதானம் வரை 1400 போலீஸ் பாதுகாப்பு

பதிவு செய்த நாள்

19 நவ
2023
11:11

சபரிமலை: தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு உதவுவதற்காக பம்பை முதல் சன்னிதானம் வரை 1400 போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் .

சபரிமலையில் தற்போது மண்டல கால பூஜை நடைபெற்று வருகிறது தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இருமுடி கட்டி ஏந்தி வந்து தரிசனம் நடத்துகின்றனர். ஆன்லைன் முன்பதிவு மூலம் வரும் பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். பம்பை ஆஞ்சநேயா ஆடிட்டோரியத்தில் ஆன்லைன் முன் பதிவு சரிபார்த்த பின்னர் பக்தர்கள் தொடர்ந்து நீலி மலை,அப்பாச்சி மேடு வழியாக சன்னிதானம் செல்கின்றனர்.

பம்பையில் இருந்து சன்னிதானம் வரை உள்ள பாதைகளில் பக்தர்களின் பாதுகாப்புக்காகவும் அவர்களுக்கு உதவுவதற்காகவும் 1400 போலீசார் பணியமர்த்தப்பட்டுள்ளனர். ஆன்லைன் முன்பதிவு முறையில் கடந்த இரண்டு நாட்களில் 37 ஆயிரத்து 348 பக்தர்கள் தரிசனம் நடத்தியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். தரிசனத்துக்கான ஆன்லைன் முன்பதிவு முழுக்க முழுக்க இலவசம் என்று தேவசம்போர்டு தெரிவித்துள்ளது. சகாஸ் மற்றும் சென்னை சிம்ஸ் மருத்துவமனை இணைந்து சன்னிதானத்தில் அவசர சிகிச்சை மையம் , ஆம்புலன்ஸ், உள்ளிட்ட வசதியுடன் மருத்துவமனையை தந்திரி மகேஷ் மோகனரரு குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். மேல் சாந்தி மகேஷ் நம்பூதிரி, தேவசம்போர்டு நிர்வாக அதிகாரி கிருஷ்ணகுமார் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர். சன்னிதானத்தில் தேவசம்போர்டு நடத்தும் அன்னதானம் மற்றும் ஊழியர்களுக்கான மெஸ்ஸுக்கு காய்கறி வருவதில் இருந்த தடங்கல்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது காய்கறி மற்றும் பொருட்கள் தடையின்றி வந்து கொண்டிருப்பதாகவும் தேவசம்போர்டு அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றத்தில், சித்திரை பிரம்மோத்சவத்தை முன்னிட்டு, 63 நாயன்மார்கள், ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: 100 சதவீத ஓட்டுப்பதிவு விழிப்புணர்வு ஏற்படுத்திய தாக்கத்தால் ராமேஸ்வரத்தில் பக்தர்கள், ... மேலும்
 
temple news
சென்னை: சைதாப்பேட்டை, சொர்ணாம்பிகை உடனுறை காரணீஸ்வரர் கோவில் சித்திரைப் பெருவிழாவின் மூன்றாம் நாளான ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில், பட்டாபிஷேக ராமர் சன்னதி உள்ளது. ஒவ்வொரு ... மேலும்
 
temple news
உத்தரகாண்ட்: உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற பத்ரிநாத் கோவில், இன்று (ஏப்ரல் 23 )காலை 6:15 மணிக்கு, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar