Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 36 அகல் விளக்கு வைத்து பத்மாசனம் ... திருச்செந்தூரில் திருக்கல்யாணம் கோலாகலம்; மொய் எழுதி பக்தர்கள் வழிபாடு திருச்செந்தூரில் திருக்கல்யாணம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலையில் பம்பை முதல் சன்னிதானம் வரை 1400 போலீஸ் பாதுகாப்பு
எழுத்தின் அளவு:
சபரிமலையில் பம்பை முதல் சன்னிதானம் வரை 1400 போலீஸ் பாதுகாப்பு

பதிவு செய்த நாள்

19 நவ
2023
11:11

சபரிமலை: தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு உதவுவதற்காக பம்பை முதல் சன்னிதானம் வரை 1400 போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் .

சபரிமலையில் தற்போது மண்டல கால பூஜை நடைபெற்று வருகிறது தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இருமுடி கட்டி ஏந்தி வந்து தரிசனம் நடத்துகின்றனர். ஆன்லைன் முன்பதிவு மூலம் வரும் பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். பம்பை ஆஞ்சநேயா ஆடிட்டோரியத்தில் ஆன்லைன் முன் பதிவு சரிபார்த்த பின்னர் பக்தர்கள் தொடர்ந்து நீலி மலை,அப்பாச்சி மேடு வழியாக சன்னிதானம் செல்கின்றனர்.

பம்பையில் இருந்து சன்னிதானம் வரை உள்ள பாதைகளில் பக்தர்களின் பாதுகாப்புக்காகவும் அவர்களுக்கு உதவுவதற்காகவும் 1400 போலீசார் பணியமர்த்தப்பட்டுள்ளனர். ஆன்லைன் முன்பதிவு முறையில் கடந்த இரண்டு நாட்களில் 37 ஆயிரத்து 348 பக்தர்கள் தரிசனம் நடத்தியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். தரிசனத்துக்கான ஆன்லைன் முன்பதிவு முழுக்க முழுக்க இலவசம் என்று தேவசம்போர்டு தெரிவித்துள்ளது. சகாஸ் மற்றும் சென்னை சிம்ஸ் மருத்துவமனை இணைந்து சன்னிதானத்தில் அவசர சிகிச்சை மையம் , ஆம்புலன்ஸ், உள்ளிட்ட வசதியுடன் மருத்துவமனையை தந்திரி மகேஷ் மோகனரரு குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். மேல் சாந்தி மகேஷ் நம்பூதிரி, தேவசம்போர்டு நிர்வாக அதிகாரி கிருஷ்ணகுமார் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர். சன்னிதானத்தில் தேவசம்போர்டு நடத்தும் அன்னதானம் மற்றும் ஊழியர்களுக்கான மெஸ்ஸுக்கு காய்கறி வருவதில் இருந்த தடங்கல்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது காய்கறி மற்றும் பொருட்கள் தடையின்றி வந்து கொண்டிருப்பதாகவும் தேவசம்போர்டு அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி; திருச்சி, மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவிலில், விநாயகர் சதுர்த்தியான நேற்று, 150 கிலோ ... மேலும்
 
temple news
திருப்புத்துார்; சிவகங்கை மாவட்டம் திருப்புத்துார் அருகே பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் ... மேலும்
 
temple news
மதுரை: கோவில் மற்றும் வீடுகளில் இன்று விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், –  உலக புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரியகோவில் மாமன்னன் ராஜராஜசோழனால் 1010-ம் ஆண்டு ... மேலும்
 
temple news
ஆர்.எஸ்.மங்கலம்; உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயிலில் நடைபெற்ற சதுர்த்தி விழாவில் பக்தர்கள் தீ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar