அண்ணாமலையாருக்கு அரோகரா; திருவண்ணாமலையில் கண்ணாடி ரிஷப வாகனத்தில் சுவாமி உலா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21நவ 2023 03:11
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோவிலில், கார்த்திகை தீபம், ஐந்தாம் நாள் விழாவில், கண்ணாடி ரிஷப வாகனத்தில் சுவாமி வீதி உலா நடந்தது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், கார்த்திகை தீப திருவிழாவில், ஐந்தாம் நாளான இன்று பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. காலை உற்சவத்தில் கண்ணாடி ரிஷப வாகனத்தில் உண்ணாமுலை அம்மன் சமேதராய் அண்ணாமலையார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, மாட வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.