செங்கோட்டை: செங்கோட்டை தம்ஸம்வர்த்தினி கோயிலில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு சீதா கல்யாண உபன்யாசம் நடந்தது. செங்கோட்டை தர்மஸம்வர்த்தினி கோயில் நவராத்திரி விழாவை முன்னிட்டு நேற்று மாலை நடந்த சீதா கல்யாண உபன்யாசத்தில் திருச்சி கல்யாணராமன் பேசியதாவது:- விசுவாமித்திரர் தசரதனை தேடிவந்து என் யாகத்தை காக்க உன் பிள்ளை ராமனை கொடு என்றார். விசிஷ்டர் ஆலோசனையின்படி ராமனை தசரதன் விசுவாமித்திரரிடம் கொடுத்தார். ராமர், லெட்சுமணன் விசுவாமித்திரரின் யாகத்தை காத்தார்கள். கவுதவ முனிவரின் ஆசிரமம் தேடிச் சென்று கல்லாய் இருந்த அகலிகையை பெண்ணாக்கி, பிறகு மிதிலை மாநகர் வந்தனர். ஜனக மகாராஜா வைத்திருந்த சிவதனுசை விசுவாமித்திரரின் ஆலோசனைப்படி ராமர் வில்லை வளைத்தார். அப்போது ஜனக மகாராஜா, "என் மகள் சீதை, ராமா உன் நிழலை போல் தொடர்வாள் என உறுதி கொடுத்தார். இந்த நிகழ்விற்கு விளக்கம் என்னவென்றால், காலையில் நிழல் பின் தொடரும், உச்சி வேளையில் கூட வரும், மாலையில் முன் செல்லும். அதைப்போல ராமா, காலை உன் பின்னால் வருவாள், வனத்திற்கு செல்லும் போது உச்சி நிழல் போல் தொடர்வாள், ராமனாக அவதரித்ததே ராவணனை கொல்வதற்காக தான். அதனால் இலங்கைக்கு ராமர் போவதற்கு முன்னாள் சீதையாகிய என் மகள் மாலை நிழல் போல் உனக்கு முன்னால் சென்றுவிடுவாள் என தெரிவித்தாராம்.கணவன், மனைவி ஒருவருக்கொருவர் ஒற்றுமையுடன் புரிந்து கொண்டு இருப்பார்களேயானால் குடும்பம் நல்ல முறையாக திகழும் என உபன்யாசத்தில் திருச்சி கல்யாணராமன் தெரிவித்தார்.