இளையான்குடி: வாள்மேல் நடந்த அம்மன் கோயிலில் அக்.,24ல் மாலை 6.30 மணிக்கு மகர் நோன்பை முன்னிட்டு அம்மன் குதிரை வாகனத்தில் அம்பு எய்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.இளையான்குடி வாள்மேல் நடந்த அம்மன் கோயிலில் ஆயிர வைசிய சபையினரால் நவராத்திரி விழா அக்.16 ல் துவங்கி நடந்து வருகிறது. தினமும் அம்மன் அன்னபூரணி, லெட்சுமி, மகிஷாசுரமர்த்தினி அலங்காரத்தில் அருள் பாலித்து வருகிறார். முக்கிய திருவிழாக்களான அக்.,19 ல் இரவு 7 மணிக்கு திருவிளக்கு பூஜை நடந்தது. அக்., 24 ல் மாலை 6.30 மணிக்கு அம்மன் குதிரை வாகனத்தில் அம்பு எய்தல் நிகழ்ச்சியும், அக்., 27ல் இரவு 7 மணிக்கு மின் தீப அலங்காரத்தில் , அம்மன் புஷ்ப பல்லக்கில் எழுந்தருளி அருள்பாலிக்கிறார்.