Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பல நூறு ஆண்டுக்கு பின் மீட்கப்பட்ட ... மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் அமைச்சர்கள் நேரு, மஸ்தான் சாமி தரிசனம் மேல்மலையனுார் அங்காளம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழனி முருகன் கோயிலில் பக்தர்கள் அதிர்ச்சி; நாதஸ்வரம், தவில் வாசித்து செல்ல தடை
எழுத்தின் அளவு:
பழனி முருகன் கோயிலில் பக்தர்கள் அதிர்ச்சி; நாதஸ்வரம், தவில் வாசித்து செல்ல தடை

பதிவு செய்த நாள்

05 ஜன
2024
10:01

பழனி ; பழனி முருகன் கோவிலுக்கு நாதஸ்வரம், தவில் வாசித்து செல்ல தடை விதிக்கப்பட்டதாக கோவில் ஊழியர்கள் தடுத்து நிறுத்தியதால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர். அறநிலையத்துறை அரசாணை இருக்கிறதா என்று கேட்டு பக்தர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளுள் மூன்றாவது படை வீடாகத் திகழ்வது பழனி, ஞானப்பழம் தனக்கு கிடைக்காத கோபத்தில், ஆண்டியாய் இங்கு வந்து தங்கினார் முருகப்பெருமான். அதனால் அவரை இங்கு ஆண்டிக் கோலத்தில் தண்டாயுதபாணியாக காண முடிகிறது. சிவனும், பார்வதியும் தம் இளைய மைந்தனான முருகப் பெருமானை ஞானப்பழம் நீ என அழைத்ததால் பழம் நீ என வழங்கப்பெற்று. அதுவே பின்னர் பழனி என மருவி விட்டது. சிறப்பு மிக்க இக்கோயிலில் தினமும் பல்வேறு பகுதியில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வழிபட்டு செல்கின்றனர். இங்கு தைப்பூச திருவிழா 19ம் தேதி துவங்கி 25ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்காக தற்போது பாதயாத்திரையாக ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் கரூரை சேர்ந்த பக்தர்கள் பாதயாத்திரையாக நாதஸ்வரம், மேளங்கள் வாசித்தபடி காவடிகள் எடுத்து வந்தனர். கோயிலுக்குள் சென்ற இவர்களை கோயில் பாதுகாவலர்கள் தடுத்து நிறுத்தி, நாதஸ்வரம், மேளம் அடித்து வர அனுமதியில்லை என வாக்குவாதம் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து பக்தர்கள் கூறுகையில்; 48 வருடமாக விரதம் இருந்து, மேள தாளங்கள் முழுங்க முருகனை தரிசித்து வருகிறோம். தற்போது திடிரென அனுமதி மறுப்பது எங்களுக்கு மன உளைச்சலையும், வேதனையையும் ஏற்படுத்தி உள்ளது. உதவி ஆணையர் உத்தரவை ரத்து செய்து மேளதாளங்கள் வாசிக்க அனுமதி வழங்க வேண்டும். என பக்தர்கள் தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பூம்புகாரில் காவிரி ஆறு, கடல் சங்கமிக்கும் சங்கமத்துறையில் ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் பொங்கல் கொண்டாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.சிதம்பரம் ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக தேரோட்டத்தை முன்னிட்டு தேர் கட்டும் பணி தீவிரம் ... மேலும்
 
temple news
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம் மலையாண்டவர் என்கிற ராஜராஜேஸ்வரி சமேத ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காணும் பொங்கலையொட்டி, காஞ்சிபுரத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் நேற்று பக்தர்கள் கூட்டம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar