Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநியில் பாதயாத்திரை பக்தர்கள் ... எம்ஜிஆர் குணமாக காஞ்சி மகா பெரியவர் செய்த அர்ச்சனை எம்ஜிஆர் குணமாக காஞ்சி மகா பெரியவர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புரி பீடாதிபதியின் சர்ச்சை கருத்துக்கு கடும் எதிர்ப்பு
எழுத்தின் அளவு:
புரி பீடாதிபதியின் சர்ச்சை கருத்துக்கு கடும் எதிர்ப்பு

பதிவு செய்த நாள்

08 ஜன
2024
01:01

மதுரா: அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த புரி மடத்தின் பீடாதிபதி சுவாமி நிச்சலானந்தா சரஸ்வதி, மக்களிடம் பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என துறவி அதோக் ஷாஜானந்தா தியோ தீர்த் தெரிவித்துள்ளார்.

பெரும் சர்ச்சை; உத்தர பிரதேசத்தின் அயோத்தியில், ஸ்ரீராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை சார்பில், பிரமாண்ட ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இதன் கும்பாபிஷேக விழா, வரும் 22ம் தேதி நடக்கவுள்ளது. விழா ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று, ராமர் சிலையை பிரதிஷ்டை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. இதற்கு ஒடிசாவின் புரி பீடாதிபதி சுவாமி நிச்சலானந்தா சரஸ்வதி தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சமீபத்தில் இதுகுறித்து அவர் கூறுகையில், பிரதமர் மோடி, கடவுள் ராமர் சிலையைத் தொட்டு பிரதிஷ்டை செய்யும்போது நான் அங்கு நின்று கைகளை தட்டி கொண்டாட வேண்டுமா! இது நம் கலாசாரத்துக்கு எதிரானது. இதனால் நான் அங்கு செல்லப்போவது இல்லை. ராமர் சிலை பிரதிஷ்டையில் கண்ணியம் மீறப்படுவதை என்னால் பார்க்க முடியாது. நான் அந்நிகழ்வை பார்க்க விரும்பவில்லை, என்றார். இதற்கு பல்வேறு தரப்பினரும் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில், துறவி அதோக் ஷாஜானந்த் தியோ தீர்த் கூறியதாவது: சுவாமி நிச்சலானந்த சரஸ்வதி தன் இழிவான பேச்சால், 140 கோடி இந்திய மக்களையும் அவமானப்படுத்தி உள்ளார். எனவே, அவர், பொதுமக்களிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்.

கும்பாபிஷேகம்; உலகிலேயே மிகவும் பிரபலமான தலைவர்களில் ஒருவர் நம் பிரதமர் நரேந்திர மோடி. நம் பண்டைய கால வரலாற்றில், பழங்கால கோவில்களை கட்டமைத்த அரசர்களே, இதர நிகழ்ச்சிகளையும் முன்னின்று நடத்துவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதேபோல், நம் நாட்டு மக்களின் பிரதிநிதியாக, பிரதமர் மோடி உள்ளார். எனவே, அவர் முன்னின்று அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் செய்வதே சரியானது. இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு; கரிங்கரைப்புள்ளி காடாங்கோடு பகவதி அம்மன் கோவில் பிரதிஷ்டை தின உற்சவம் வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; அஷ்டமி பூப்பிரதட்சனம் யொட்டி ராமேஸ்வரத்தில் ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் தங்க ... மேலும்
 
temple news
சிதம்பரம்: கடலுார் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவிலில், உலக சாதனை முயற்சியாக, 900க்கும் மேற்பட்ட நாட்டிய ... மேலும்
 
temple news
கூடலுார்; கூடலுார் கூடலழகிய பெருமாள் கோயிலில் கூடாரவல்லி திருவிழா வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலுக்கு வரும் பாதயாத்திரை சாரல் மலையில் சாலைகளில் பாதுகாப்புக்கு இன்றி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar