Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அல்லிநகரம் தண்டீஸ்வர அய்யனார் ... திருவொற்றியூர் தியாகராஜர் பிரம்மோற்சவ திருத்தேர் திருவிழா கோலாகலம் திருவொற்றியூர் தியாகராஜர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிதம்பரம் நடராஜர் கோவிலின் வரவு, செலவு விபரங்களை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு
எழுத்தின் அளவு:
சிதம்பரம் நடராஜர் கோவிலின் வரவு, செலவு விபரங்களை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு

பதிவு செய்த நாள்

22 பிப்
2024
11:02

சென்னை:சிதம்பரம் நடராஜர் கோவிலின் மூன்றாண்டு வரவு- செலவு கணக்கு விபரங்களை தாக்கல் செய்யும்படி, பொது தீட்சிதர் குழுவுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அனுமதி பெறாமல், கோவிலுக்குள் எந்த கட்டுமானங்களையும் மேற்கொள்ள, பொது தீட்சிதர் குழுவுக்கு தடை விதிக்க வேண்டும். தணிக்கை மேற்கொள்ள கணக்குகளை சமர்ப்பிக்கும்படி, பொது தீட்சிதர் குழு செயலருக்கு உத்தரவிட வேண்டும் என, ஹிந்து அறநிலையத் துறை வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு, நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஆதிகேசவலு அடங்கிய சிறப்பு அமர்வு முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அறநிலையத் துறை சார்பில், சிறப்பு பிளீடர் அருண் நடராஜன் ஆஜராகி, சட்ட விரோதமாக கட்டுமானம் செய்ய மாட்டோம்; அவ்வாறு நடந்தால், உடனே பணிகள் நிறுத்தப்படும் என, தீட்சிதர்கள் குழு தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. ஆனால், அதை மீறி கட்டுமானங்களை மேற்கொள்கின்றனர், எனக் கூறி, அதற்கான புகைப்பட ஆதாரங்களை தாக்கல் செய்தார். மேலும், கோவில் நிர்வாகம் சார்பில் 2023 - -24ம் ஆண்டுக்கான வருமான வரி தாக்கலில், 2.09 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்ததாகக் குறிப்பிட்டுள்ளனர். ஆனால், ஆருத்ரா தரிசன விழாவின்போது மட்டும், 6 லட்சம் ரூபாய் வரை வருவாய் வருகிறது.

சிறிய கோவிலில் கூட, ஆண்டு வருவாய் அதிகமாக இருக்கும்போது, பிரசித்த பெற்ற இக்கோவிலில் குறைந்த அளவில் வருவாய் எப்படி இருக்கும்? என்றும், கேள்வி எழுப்பினார். அதற்கு பொது தீட்சிதர்கள் குழு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஹரிசங்கர், சட்ட விரோதமாக கட்டுமானம் நடக்கவில்லை. இதுபோன்ற குற்றச்சாட்டுகளை சுமத்தி, கோவில் நிர்வாகத்தில் மறைமுகமாக அறநிலையத் துறை தலையிட முயற்சிக்கிறது. வரவு - செலவு தணிக்கை செய்யப்படுகிறது, என்றார். இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், நீதிமன்றத்தில் அளித்த உத்தரவாதத்தை மீறி நடந்தால், கடும் உத்தரவுகளை பிறப்பிக்க நேரிடும் என எச்சரித்தனர். கோவிலின் கடந்த மூன்றாண்டு வரவு - செலவு, வருமான வரி தாக்கல் விபரங்களை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி; திருச்சி, மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவிலில், விநாயகர் சதுர்த்தியான நேற்று, 150 கிலோ ... மேலும்
 
temple news
திருப்புத்துார்; சிவகங்கை மாவட்டம் திருப்புத்துார் அருகே பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் ... மேலும்
 
temple news
மதுரை: கோவில் மற்றும் வீடுகளில் இன்று விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், –  உலக புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரியகோவில் மாமன்னன் ராஜராஜசோழனால் 1010-ம் ஆண்டு ... மேலும்
 
temple news
ஆர்.எஸ்.மங்கலம்; உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயிலில் நடைபெற்ற சதுர்த்தி விழாவில் பக்தர்கள் தீ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar