Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்புவனம் புதூர் மாரியம்மன் ... ஆனந்த தாண்டீஸ்வரர் அலங்காரத்தில் அருள்பாலித்த நடராஜர் ஆனந்த தாண்டீஸ்வரர் அலங்காரத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரமடை அரங்கநாதர் கோவிலில் திருக்கல்யாண வைபவம்
எழுத்தின் அளவு:
காரமடை அரங்கநாதர் கோவிலில் திருக்கல்யாண வைபவம்

பதிவு செய்த நாள்

23 பிப்
2024
01:02

மேட்டுப்பாளையம்; காரமடை அரங்கநாதர் கோவிலில், திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. நாளை மாலை, 4:00 மணிக்கு தேரோட்டம் நடைபெற உள்ளது.

கோவை மாவட்டத்தில், மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ ஸ்தலம், காரமடை அரங்கநாதர் கோவில். இக்கோவிலில் மாசிமகத் தேர்த் திருவிழா, ஒவ்வொரு ஆண்டும், வெகு விமர்சையாக நடைபெறும். இந்த ஆண்டு மாசி மகத் தேர்த்திருவிழா, 17ம் தேதி கிராம சாந்தியும்,18ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இன்று அதிகாலை, 5:30 மணிக்கு திருக்கல்யாண வைபமும் நடைபெற்றது. கோவில் வளாக மண்டபத்தில், திருமண கோலத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக அரங்கநாத பெருமாள் எழுந்தருளினார். அங்கு புண்ணிய வசனம், காப்பு கட்டும் பூஜை நடந்தது. பின்பு அரங்கநாத பெருமாளுக்கு பூணூல் அணிவிக்கப்பட்டது. ஹோமகுண்டம் வளர்த்து திருக்கல்யாண வைபவத்தை அர்ச்சகர்கள் செய்தனர். சுரேஷ், திருவேங்கடம் ஆகிய இரு அர்ச்சகர்கள், மாலைகளை எடுத்து சென்று பக்தர்கள் நடுவில் நடனமாடி வந்தனர். பின்னர் ஸ்ரீதேவி, பூதேவிக்கு, அரங்கநாதர் பெருமாள் சார்பில், அர்ச்சகர்கள் மாலை அணிவித்தனர். அதைத் தொடர்ந்து கோவில் ஸ்தலத்தார் வேதவியாச பட்டர், திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஆகிய இருவரும், மஞ்சள் சூரணம் இடித்து சுவாமிக்கு வைத்தனர். பின்பு, மாங்கல்ய பூஜை நடைபெற்ற பின், அரங்கநாத பெருமாள் சார்பில், அர்ச்சகர்கள், ஸ்ரீதேவி, பூதேவிக்கு மாங்கல்யம் அணிவித்தனர். இந்த வைபவத்தில் பங்கேற்ற பக்தர்களுக்கு, தாலி சரடு பிரசாதம் வழங்கப்பட்டது. தனியார் அமைப்பினர் சார்பில், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

நாளை தேரோட்டம்; தேர்த்திருவிழாவை முன்னிட்டு நாளை அதிகாலை, 5:30 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக அரங்கநாத பெருமாள், தேருக்கு எழுந்தருளுகிறார். மாலை, 4:00 மணிக்கு தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சியும், அதை தொடர்ந்து தேரோட்டமும் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் லோகநாதன், அறங்காவலர் குழு தலைவர் தேவ் ஆனந்த், அறங்காவலர்கள் ராமசாமி, கார்த்திகேயன், சுஜாதா ஜவஹர், குணசேகரன் மற்றும் கோவில் பணியாளர்கள் ஆகியோர் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; துடியலூர், விளாங்குறிச்சி, பெரியநாயக்கன்பாளையம், நரசிம்மநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம்- கோவில்பட்டி கைலாசநாதர்-செண்பகவல்லி அம்மன் கோவிலில் ஆடி மாத இரண்டாவது ... மேலும்
 
temple news
திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலில் இன்று ஆடி இரண்டாம் வெள்ளிக்கிழமையை ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூரத் திருவிழா ... மேலும்
 
temple news
நாகர்கோவில்; பரசுராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாக கருதப்படும், 3,000 ஆண்டுகள் பழமையான கன்னியாகுமரி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar