பதிவு செய்த நாள்
23
பிப்
2024
03:02
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயிலில் அடுத்த மாதம் மார்ச் மூன்றாம் தேதி முதல் 16ஆம் தேதி வரை நடக்க இருக்கும் வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவத்தை யொட்டி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு .தாரக சீனிவாசலு நிர்வாக அதிகாரி நாகேஸ்வரராவ் ஆகியோர் கோயில் பொறியியல் துறை அலுவலர்களுடன் கோயிலின் நான்கு கோபுரங்களிலும் (க்யூ - லைன்ஸ் )வரிசைகளை ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு உரிய அறிவுரை வழங்கினர்.
இதுகுறித்து தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு தாரக சீனிவாசுலு கூறியதாவது: வருடாந்திர மகாசிவராத்திரி முன்னிட்டு கோயிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் வசதிக்காக, நான்கு கோபுரங்களிலும் வரிசைகள் அமைப்பது குறித்து, பொறியியல் துறை அலுவலர்களுடன் ஆய்வு செய்து, அதிகாரிகளுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டன. அதேபோல், சர்வ தரிசனத்துக்கு வரும் பக்தர்களுக்கு இரண்டாவது கோபுரத்தில் இருந்து 200 ரூபாய் டிக்கெட்டும், மூன்றாவது கோபுரத்தில் இருந்து 500 ரூபாய் டிக்கெட்டும் அனுமதிப்போம். இதேபோல்( ப்ரோட்டோகால்) வி.வி.ஐ.பி மற்றும் விஐபி.களுக்கு நான்காவது கோபுரத்தில் இருந்து கோயிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றன. சர்வ தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு எந்த வித இடையூறும் ஏற்படாத வகையில் சாதாரண பக்தர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது என்றார். இந்த நிகழ்ச்சியில் தேவஸ்தான அதிகாரிகள் உதவி ஆணையர் மல்லிகார்ஜுன பிரசாத், பொறியியல் துறை அலுவலர்கள் செயற்பொறியாளர் நூகரத்னம்மா, துணை நிர்வாக அதிகாரி தனபால், கோயில் கண்காணிப்பாளர் நாகபூஷணம், துணை செயற் பொறியாளர் வேணுகோபால் ரெட்டி, பவன்குமார், சிவகிஷோர், பணி ஆய்வாளர் பிரதாப், பாலாஜி, சூர்யபிரசாத் மற்றும் தேவஸ்தான ஊழியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.