பதிவு செய்த நாள்
23
பிப்
2024
05:02
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் 1 கோடியே 11 லட்சம் ரூபாயை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனுார் அங்காளம்மன் கோவில் உண்டியல் என்னும் பணி நேற்று முன்தினம் காலை 9 மணிக்கு துவங்கி இரவு 9 மணிவரை நடந்தது. ஹிந்து சமய உதவி ஆணையர் மேல்மலையனுார் ஜீவானந்தம், விழுப்புரம் துணை ஆணையர் சிவலிங்கம், திருவக்கரை செயல் அலுவலர் சிவக்குமார், அறங்காவலர் குழுத் தலைவர் சுரேஷ் ஆகியோர் முன்னிலையில் உண்டியல் எண்ணப்பட்டது. இதில் 1 கோடியே 11 லட்சத்து 96 ஆயிரத்து 281 ரொக்கப்பணமும், 442 கிராம் தங்க நகைகள், 1,405 கிராம் வெள்ளி பொருட்களை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். ஆய்வர்கள் சங்கீதா, தினேஷ், கண்காணிப்பாளர் வேலு, அறங்காவலர்கள் மதியழகன், ஏழுமலை, பச்சையப்பன், சரவணன், வடிவேல், சந்தானம், மேலாளர் மணி, சதீஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.