ராயம்பாளையம் காட்டு மாரியம்மன் பொங்கல் விழா நிறைவு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23பிப் 2024 05:02
அவிநாசி; அவிநாசி ராயம்பாளையத்தில் காட்டு மாரியம்மன் கோவில் பொங்கல் பூச்சாட்டை முன்னிட்டு மஞ்சள் நீராட்டு நடைபெற்றது.
அவிநாசி ராயம்பாளையத்தில் உள்ள காட்டு மாரியம்மன் கோவிலில், கடந்த 14ம் தேதி காப்பு கட்டுதல், கம்பம் நடுதல் நிகழ்ச்சிகளுடன் பொங்கல் விழா துவங்கியது. அதனைத் தொடர்ந்து, அபிஷேக பூஜை, அம்மன் அழைத்தல், விளக்கு மாவு எடுத்து வருதல், பூவோடு எடுத்தல் ஆகியவை நடைபெற்றது. பொங்கல் விழாவிற்காக, கடந்த 16ம் தேதி அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் இருந்து தீர்த்த குடம் எடுத்து 50க்கும் மேற்பட்ட பெண்கள் ஊர்வலமாக சென்றனர். இன்று மஞ்சள் நீராட்டு விழாவுடன் பொங்கல் பூச்சாட்டு விழா நிறைவு பெற்றது. காட்டு மாரியம்மன் கோவில் விழா குழுவினர் சார்பில் பொங்கல் பூச்சாட்டு விழா நிறைவு நாளில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.