பதிவு செய்த நாள்
24
பிப்
2024
07:02
திருவண்ணாமலை; திருவண்ணாமலையில், மாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு, வெளிநாட்டு பக்தர்கள் உட்பட ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.
பிரம்மா மற்றும் விஷ்ணுவின், ‘நான்’ என்ற அகந்தையை சிவபெருமான் ஒழித்து, 2,668 அடி உயர ஜோதி வடிவாக காட்சி அளித்ததாக, தலபுராணம் கூறும் அண்ணாமலையார் மலையை, பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். இந்த மலையை, பவுர்ணமிதோறும் சித்தர்கள், ஞானிகள், மகான்கள், கிரிவலம் சென்று அருணாசலேஸ்வரரை வழிபட்டு வருவதாகவும், அன்றைய நாளில் கிரிவலம் சென்றால், அருணாசலேஸ்வரர் மற்றும் ஞானிகள், மகான்கள், சித்தர்களின் அருளாசி கிடைக்கும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இதனால், பவுர்ணமி தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள், 14 கி.மீ., துாரம் மலையை கிரிவலம் சென்று, அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனை வழிபட்டு செல்கின்றனர். அதன்படி மாசி மாத பவுர்ணமியான இன்று லட்சக்கணக்கான பக்தர்கள், கிரிவலம் சென்றனர். மேலும், கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து, சுவாமி தரிசனம் செய்தனர்.