வடிவீஸ்வரம் அழகம்மன் கோயில் மாசி திருவிழா தேரோட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24பிப் 2024 11:02
நாகர்கோவில்; கன்னியாகுமரி மாவட்டம் வடிவீஸ்வரம் அழகம்மன் கோயில் மாசி திருவிழா தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
திருஞானசம்பந்தரால் பாடி புகழப்பட்ட வரலாற்று சிறப்பு வாய்ந்த வடிவீஸ்வரம் அழகம்மன் சமேத சுந்தரேஸ்வரர் கோயிலில் மாசி திருவிழா கடந்த 15-ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் தினமும் காலையிலும் மாலையிலும் பல்வேறு வாகனங்களில் சுவாமி பவனி வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. கோயில் அருகே அமைக்கப்பட்டுள்ள தினமலர் நிறுவனர் டி.வி. ராமசுப்பைய்யர் நினைவரங்கத்தில் தினமும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. ஒன்பதாம் திருவிழாவான நேற்று தேரோட்டம் நடைபெற்றது. காலை 9 :15 -க்கு நாகர்கோவில் மாநகராட்சி மேயர் வக்கீல் மகேஷ், தேவசம்போர்டு தலைவர் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். தொடர்ந்து நான்கு வீதிகளும் வீதிகளிலும் தேர் பவனி வந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இன்று மாலை ஆராட்டுக்கு பின்னர் தெருக்களில் ஆராட்டு பவனி வலம் வந்து திருக்கொடி இறக்கப்பட்டு திருவிழா நிறைவு பெறுகிறது.