லட்சுமி குபேர ஆஞ்சநேயர் கோவிலில் அனுமனுக்கு சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24பிப் 2024 11:02
கோவை; மேட்டுப்பாளையம் ரோடு துடியலூர் பகுதியில் இருக்கும் ஸ்ரீ லட்சுமி குபேர ஆஞ்சநேயர் கோவிலில் மாசிபௌர்ணமி மற்றும் இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு அனுமனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் வெற்றிலை மாலை அலங்காரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அனுமனை தரிசனம் செய்தனர்.