பதிவு செய்த நாள்
24
பிப்
2024
12:02
புதுச்சேரி: புதுச்சேரி வைத்திக்குப்பம் கடற்கரையில் நடந்த மாசிமக தீர்த்தவாரியில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
புதுச்சேரி வைத்திக்குப் பம் கடற்கரையில், மாசிமக தீர்த்தவாரி இன்று நடந்தது. தீவனுார் சுயம்பு பொய்யாமொழி விநாயகர், செஞ்சி ரங்கநாதர், மயிலம் சுப்ரமணியர், மேல்மலையனுார் அங்காளம்மன், தீவனுார் லட்சுமிநாராயண பெருமாள், கூட்டேரிப்பட்டு பள்ளிகொண்ட பெருமாள், சிங்கிரிகோவில் லட்சுமி நரசிம்ம பெருமாள் உள்ளிட்ட சுவாமிகள் எழுந்தருள செய்தனர். இதேபோல் பல்வேறு பகுதிகளில் இருந்தும், புதுச்சேரி மற்றும் சுற்றுபுற பகுதிகளை சேர்ந்த தென்கலை வரதராஜபெருமாள், துளுக்காநத்தம்மன், அங்காளம்மன், முத்தாலம்மன் என நுாற்றுக்கும் மேற்பட்ட சாமிகள், தீர்த்தவாரியில் எழுந்தருளின. கடற்கரையில் எழுந்தருளிய சுவாமிகள் தீர்த்தவாரி முடிந்து, பக்தர்களின் தரிசனத்திற்காக கடற்கரையில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டன. புதுச்சேரி, கடலுார், விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். கடலில் புனித நீராடி பக்தர்கள் வழிபட்டனர். தீயணைப்புத் துறையினர், சுகாதார அலுவலர்கள் முதலுதவி மையங்களை அமைத்திருந்தனர். போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.