Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கும்பகோணத்தில் மாசி மக விழா: மகாமக ... சதுர்வேதமங்கலம் ருத்ரகோடீஸ்வரர் கோயில் மாசித்தேரோட்டம் சதுர்வேதமங்கலம் ருத்ரகோடீஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருக்கோஷ்டியூரில் தெப்ப உற்சவம்: வேண்டுதல் நிறைவேற்றி பெருமாளுக்கு நன்றி.. விளக்கேற்றி பெண்கள் வழிபாடு
எழுத்தின் அளவு:
திருக்கோஷ்டியூரில் தெப்ப உற்சவம்: வேண்டுதல் நிறைவேற்றி பெருமாளுக்கு நன்றி.. விளக்கேற்றி பெண்கள் வழிபாடு

பதிவு செய்த நாள்

24 பிப்
2024
01:02

திருப்புத்தூர்: சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப்பெருமாள் கோயிலில் மாசி தெப்ப உற்சவத்தை முன்னிட்டு தெப்பக் குளக்கரையில் ஏராளமான பெண்கள் தீபமேற்றினர். இக்கோயிலில் கடந்த, 15 ம் தேதி, கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. நேற்று காலை, வெண்ணெய் தாழிக்கிருஷ்ணன் திருக்கோலத்தில், பெருமாள் தெப்ப மண்டபம் எழுந்தருளினார். தொடர்ந்து, பகல், 11:56 மணிக்குள் தெப்பம் முட்டுத் தள்ளுதல் நடைபெற்றது.இன்று காலை 10:15 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவியருடன் பெருமாள், தங்கப்பல்லக்கில் திருவீதி வலம் வந்து, தெப்ப மண்டபத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பகல், 12:50 முதல் 1:20 மணிக்குள், தெப்பம் நடைபெற்றது.  மீண்டும் இரவு 10 மணிக்கு பெருமாள் தெப்பம் எழுந்தருளி, மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தை மும்முறை வலம் வந்து எழுந்தருளல் நடைபெறும்.

நேர்த்திக்கடன் விளக்கு சமர்ப்பித்தல்: தெப்ப உற்சவத்தை முன்னிட்டு பெண்கள் குளக்கரையில் தீபமேற்றி வழிபடுவது மாசித் தெப்ப உற்சவத்தில் சிறப்பானதாகும். பெண்கள் தெப்பக்குளக்கரை மற்றும் சுற்றிலும் எண்ணெய் விளக்கேற்றி வழிபட்டனர். முன்னதாக நடந்த தெப்பத் திருவிழாக்களின் போது, தங்கள் வேண்டுதல் கோரிக்கைக்காக, பிறர் ஏற்றி, அணைந்த விளக்குகளை வீட்டுக்கு எடுத்துச் சென்று, விளக்கை பெருமாளாக நினைத்து தினசரி வழிபடுகின்றனர். பின்னர் தங்கள் வேண்டுதல் நிறைவேறிய பின், நிறைவேற்றியதற்கு பெருமாளுக்கு நன்றி தெரிவித்து, விளக்கை சமர்ப்பிக்கவே குளக்கரையில் தீபமேற்றுகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புரட்டாசி சனியன்று ஓம் நாராயணாய நம என்ற எட்டெழுத்து மந்திரத்தைச் சொல்கிறோம். இதிலுள்ள நம என்ற ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்; புரட்டாசி முதல் சனிக்கிழமையான இன்று காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர்; திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி முதல் சனிவார உற்ஸவத்தை ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம் பட்டீஸ்வரத்தில், மங்களநாயகி சமேத ராமலிங்க சுவாமி கோவில் உள்ளது. ... மேலும்
 
temple news
உடுமலை; திருமூர்த்திமலை காண்டூர் கால்வாய் அருகே அமைந்துள்ள சுற்றுக்கோவிலில், புரட்டாசி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar