திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் மகுட அபிஷேக பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27பிப் 2024 10:02
திருவண்ணாமலை ; அருணாசலேஸ்வரர் கோவிலில், மாசிமக உற்சவத்தை முன்னிட்டு, மகுட அபிஷேக பூஜையில் உண்ணாமுலை அம்மன் சமேதராய் அண்ணாமலையார் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
திருவண்ணாமலை பகுதியை ஆட்சி செய்த வல்லாள மகாராஜாவுக்கு குழந்தை பேறு இல்லாததால், அண்ணாமலையாரை தனது மகனாக பாவித்ததாக புராணங் கள் கூறுகிறது. இந்நிலையில் போர்க் களத்தில் வல்லாள மகா ராஜா கொல்லப்படுகிறார். இதையடுத்து, அவருக்கு திதி கொடுக்கும் நிகழ்வு, மாசி மகம் நாளில் பள்ளிகொண்டாப்பட்டு கிராமத்தில் உள்ள ஆற்றங் கரையில் நடைபெறும். அதன்படி, மாசி மாதம் மகம் நட்சத்திரத்தில் திதி கொடுக் கும் நிகழ்வு நடைபெற்றது. இதையடுத்து, தந்தை மறைவுக்குப் பிறகு மகனுக்கு மகுடம் சூட்டும் நிகழ்வு, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. அண்ணாமலை யாருக்கு மகுடம் சூட்டப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.