‘பிடித்து வைத்தால் பிள்ளையார்’ என்ற சொலவடை தெரிந்த ஒன்று தான். அதாவது கல், மண், மஞ்சள் போன்ற பொருட்களில் விநாயகராகப் பிடித்து வைத்தால் போதும். அவர் அந்த இடத்தில் எழுந்தருளி விடுவார். அவரை வழிபட்டால் சகல சவுபாக்கியமும், வெற்றியும் கிடைக்கும்.
* மஞ்சள் – காரிய சித்தி, சகல சவுபாக்கியம் * குங்குமம் – செவ்வாய் தோஷம் தீரும், கல்வி சிறக்கும். * புற்றுமண் – நோய் தீரும், விவசாயம், வியாபாரம் பெருகும். * வெல்லம் – உடம்பிலுள்ள கட்டிகள் மறையும். * உப்பு – எதிரி பயம் நீங்கும். * வெள்ளெருக்கு – செய்வினை தோஷம் விலகும், செல்வம் சேரும். * விபூதி – உஷ்ண நோய்கள் நீங்கும். * சந்தனம் – குழந்தை பாக்கியம் * பசுஞ்சாணம் – தடையின்றி சுபநிகழ்ச்சி நடக்கும், நோய்கள் தீரும். * வாழைப்பழம் – குலம் தழைக்கும் * சர்க்கரை – கடன் தீரும். * கல் – வெற்றி சேரும். * மண் – உயர்பதவி கிடைக்கும்.