செஞ்சி:செல்லபிராட்டி லலிதா செல்வாம்பிகை கோவிலில் அம்மனுக்கு காய்கனி அலங்காரம் செய்தனர். செஞ்சியை அடுத்த செல்லபிராட்டியில் உள்ள லலிதா செல்வாம்பிகை கோவிலில் பவுர்ணமியை முன்னிட்டு நேற்று இரவு மகா புஷ்பாஞ்சலியும், ஜோதி தரிசனமும் நடந்தது. இதை முன்னிட்டு காலை 10 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர். பின்னர் 23 வகை காய்கனிகளால் அலங்காரம் செய்தனர். தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர். மதியம் 2 மணிக்கு கிராம தேவதைகளுக்கு அலங்காரம் செய்தனர். மாலை 7 மணிக்கு சிறப்பு ஹோமமும், தொடர்ந்து அஷ்டோத்ர சத நாமவலி அர்ச்சனையும், சித்தர் விளக்கு பூஜையும் நடந்தது. இரவு 11.30 மணிக்கு மகா புஷ்பாஞ்சலியும், இரவு 12 மணிக்கு ஜோதி தரிசனமும் நடந்தது.இதில் அறங்காவலர் கன்னியப்பன் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பூஜைகளை ஈஸ்வர சிவன் செய்திருந்தார்.