பதிவு செய்த நாள்
31
அக்
2012
10:10
திருநெல்வேலி: காஞ்சிமடம் பீடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் நேற்று நெல்லைக்கு விஜயம் செய்தார். அவருக்கு சங்கர மடத்தின் பக்தர்கள் சார்பில் பூரண கும்ப மரியாதை வரவேற்பு அளிக்கப்பட்டது. காஞ்சிமடம் பீடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் 2 நாட்கள் தூத்துக்குடி, நெல்லை மாவட்டத்திற்கு விஜயம் செய்யவுள்ளார். நெல்லை டவுன் ஏ.பி.மாடத்தெருவில் அமைந்துள்ள சங்கமடத்திற்கு நேற்று ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் விஜயம் செய்தார். அவருக்கு ராஜகோபால தீட்சதர் தலைமையில் காஞ்சிசங்கரமடம் பக்தர்கள் வரவேற்பு அளித்தனர். ஜெயஜிந்த் பொன்னுச்சாமி ஐயர், முன்னாள் தாசில்தார் அழகம்மாள், ராகவன், கலிங்கப்பட்டி ஆர்.வி.எஸ்.துரைராஜ், டாக்டர் பத்ரிநாராயணன், பொறியாளர் கருப்பசாமி, ஜெயேந்திரா பள்ளி முதல்வர் உஷாராமன், தாளாளர் நிர்மல் ராமரத்தினர், துணை முதல்வர் கங்கா, ராஜம் மாமி, எம்.டி.கண்ணா, சிவ ராமச்சந்திரன், கைலாஷ் உழவாரப்பணிக்குழு திருஞானசம்பந்தம், திரிபுராந்தீஸ்வரர் தெப்பக்குழு உழவாரப்பணிக்குழுவினர், இந்து முன்னணி உடையார், சுவாமி சுப்பிரமணியன், எஸ்.எஸ்.மணி, சீனிச்சாமி, ஆறுமுகம் ஆசாரி, அறங்காவலர் குழு முன்னாள் தலைவர் சீனிவாசன், பாளை., சுப்பிரமணியன், ஜூவல் பேலஸ் ரகமதுல்லா, கிருஷ்ணபுரம் பாடசாலை மீனாட்சி, பாடசாலை மாணவர்கள், சங்கரபாண்டியன், ஓய்வு பெற்ற நூலகர் ஆறுமுகதேவர், சுவாமிநாதன், வேணுவனம் முத்தமிழ் மன்றம் உறுப்பினர்கள், பாமணி, சுந்தரம், ஆனந்தம் அமிர்தம் உட்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் சங்கரமடத்தில் பக்தர்களுக்கு சுவாமிகள் ஆசி வழங்கினார்.