Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருத்தளிநாதர் கோயிலில் ஜெயந்தன் ... கோவை தண்டுமாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை கோவை தண்டுமாரியம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
47 கோடி ஆண்டுகளுக்கு முன் இருந்த வாசுகி பாம்பின் படிமங்கள்: விஞ்ஞானிகள் ஆய்வில் தகவல்
எழுத்தின் அளவு:
47 கோடி ஆண்டுகளுக்கு முன் இருந்த வாசுகி பாம்பின் படிமங்கள்: விஞ்ஞானிகள் ஆய்வில் தகவல்

பதிவு செய்த நாள்

20 ஏப்
2024
11:04

புதுடில்லி: குஜராத்தில் 2005ல் கண்டறியப்பட்ட புதைபடிமப் பொருள், 47 கோடி ஆண்டுகளுக்கு முன் இருந்த, வாசுகி இன பாம்பைச் சேர்ந்தவை என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

குஜராத் மாநிலம் கட்ச் பகுதியில் உள்ள நிலக்கரி சுரங்கத்தின் அருகே, 2005ம் ஆண்டு தொல்லியல் துறை ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, மிக நீளமான உருவ அமைப்புடன் கூடிய படிமப் பொருள் ஒன்றை கண்டறிந்தனர். அது, முதலை இனமாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதினர். எனினும், அந்த படிமப்பொருள் தொடர்பாக உத்தரகண்டில் உள்ள ஐ.ஐ.டி., ரூர்க்கியைச் சேர்ந்த டெபாஜித் தத்தா, சுனில் பாஜ்பாய் ஆகிய விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர். இவர்களது ஆய்வுக் கட்டுரை, ஜர்னல் சயின்டிபிக் ரிப்போர்ட்ஸ் என்ற அறிவியல் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆய்வுக் கட்டுரையில், கடந்த 2023ல் கட்ச் பகுதியில் கண்டறியப்பட்ட புதைபடிமப் பொருளில், 27 பாகங்களின் எலும்புகளை ஆய்வு செய்தபோது, அவை ஒன்றுடன் ஒன்று தொடர்புடையதாக இருந்தது. அது, மிக நீளமான பாம்பு இனத்தைச் சேர்ந்தது. குறிப்பாக, இது, பழங்காலத்தில் வாழ்ந்ததாக நம்பப்பட்ட வாசுகி பாம்பு இனத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் என தெரிவித்துள்ளனர். இதன் நீளம் 36 அடி முதல் 50 அடி வரை இருந்திருக்க வாய்ப்பு உள்ளது. நீண்ட மற்றும் உருளை வடிவமாக இந்த பாம்பு இருந்திருக்கும். முழுமையான எலும்புக்கூடு இல்லாததால், இந்த பாம்பின் மொத்த நீளம் எவ்வளவு என்பதை கண்டறிய முடியவில்லை என, விஞ்ஞானிகள் தங்கள் ஆய்வுக் கட்டுரையில் சுட்டிக்காட்டி உள்ளனர். இதற்கு முன், தென் அமெரிக்காவின் கொலம்பியாவில் நடந்த புதை படிவ ஆராய்ச்சியில், அழிந்துபோன உயிரினமான டைட்டானோபோவா என்ற மிகப்பெரிய பாம்பு இனத்தின் முழு உடல் பாகங்கள் கண்டறியப்பட்டன. பாம்பின் நீளம் 43 அடியாக இருந்தது. வாசுகி பாம்பு, புராணங்களில் நாகங்களின் அரசனாக இருந்ததாகவும், 50 அடி வரை வளரக்கூடியதாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மேட்டுப்பாளையம்; புரட்டாசி மாத கிருஷ்ண பட்ச ஏகாதசி முன்னிட்டு காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் நடந்த ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் தருமபுரம் ஆதீனம் ஆயுள் ஹோமம் மற்றும் ருத்ரா அபிஷேகம் செய்து ... மேலும்
 
temple news
உத்தரபிரதேசம், ராம ஏகாதசியை முன்னிட்டு, பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி பக்தர்கள் ... மேலும்
 
temple news
கோவை; கோவை மாவட்டம் அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி மாதம் ஏகாதசி திதியை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar