Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பச்சைப்பட்டு உடுத்தி வைகை ஆற்றில் ... சித்ரா பௌர்ணமி; திருவண்ணாமலையில் குவிந்த பக்தர்கள்.. கிரிவலம் சென்று வழிபாடு சித்ரா பௌர்ணமி; திருவண்ணாமலையில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மானாமதுரையில் பச்சை பட்டு உடுத்தி ஆற்றில் இறங்கிய வீர அழகர்; பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
மானாமதுரையில் பச்சை பட்டு உடுத்தி ஆற்றில் இறங்கிய வீர அழகர்; பக்தர்கள் தரிசனம்

பதிவு செய்த நாள்

23 ஏப்
2024
09:04

மானாமதுரை; மானாமதுரையில் சித்திரைத் திருவிழாவில் வீர அழகர் பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

மானாமதுரை வீர அழகர் கோயிலில் வருடந்தோறும் சித்திரை திருவிழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும். கடந்த 19ம் தேதி கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. விழா நாட்களின்போது தினந்தோறும் வீர அழகர் பல்வேறு வாகனங்களில் மண்டகப்படிகளில் எழுந்தருளி வீதி உலா சென்றார்.விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான எதிர்சேவை நேற்று இரவு நடைபெற்றது.அதனை தொடர்ந்து வீர அழகர் அலங்கரிக்கப்பட்ட பூப்பல்லக்கில் அப்பன் பெருமாள் கோயிலுக்கு சென்றார். இன்று அதிகாலை வீர அழகருக்கு பால் பன்னீர் இளநீர் தயிர் சந்தனம் திரவியம் உள்ளிட்ட 18 வகையான பொருட்களால் திருமஞ்சனம் நடத்தப்பட்டு சர்வ அலங்காரங்களுடன் வெள்ளை குதிரை வாகனத்தில் பச்சை பட்டு உடுத்தி எழுந்தருளிய வீர அழகர் நகரின் முக்கிய வீதிகளின் வழியே வீதியுலா வந்து மண்டகப்படிகளுக்கு காட்சி கொடுத்த பின்னர் காலை 7:40 மணிக்கு ஆனந்தவல்லி அம்மன் கோவில் எதிரே வைகை ஆற்றில் இறங்கினார்.அப்போது கள்ளழகர் வேடம் பூண்டு வந்த ஏராளமான பக்தர்கள் வீர அழகர் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். மேலும் கள்ளழகர் வேடம் போன்ற பக்தர்கள் திரி எடுத்து ஆடி அரிவாள் மீது நின்று பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறினர்.பின்னர் வீர அழகர் ஆற்றுக்குள் ஆங்காங்கே அமைக்கப்பட்டிருந்த மண்டகப்படிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்த பின்பு ஆற்றுக்குள் இருந்த ஆயிரம் பொன் சப்பரத்திற்கு எழுந்தருளினர். அதனை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து வந்தனர், அதனைத்தொடர்ந்து வீர அழகர் தல்லாகுளம் முனியாண்டி கோயில் அருகே அமைக்கப்பட்டு இருந்த மண்டகப்படிக்கு எழுந்தருளினார்.இந்நிகழ்ச்சியில் நகராட்சி தலைவர் மாரியப்பன் கென்னடி துணைத்தலைவர் பாலசுந்தரம் கமிஷனர் ரெங்கநாயகி பொறியாளர் சீமா, நகராட்சி கவுன்சிலர்கள் மற்றும் குதிரை வாகன உரிமையாளர் நாகலிங்கம் வாரிசுதாரர்கள் முருகானந்தம், கணேசன், ஆறுமுகம், நமச்சிவாயம்,சீனியப்பா அன் கோ உரிமையாளர்கள் சுப்ரமணியன், ஜான்தினகரன்,ஆனந்தகிருஷ்ணன் அன் கோ உரிமையாளர்கள் ஆனந்த கிருஷ்ணன், குணா(எ)குணசீலன்,பத்திர எழுத்தர் வேல்முருகன்,அருணாச்சி அம்மன் சேம்பர் உரிமையாளர்கள் நாகராஜன்,ராஜேந்திரன்,மல்லல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் மூர்த்தி உள்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர், தஞ்சாவூர் அருகே களிமேட்டில், 64 நாயன்மார்களில் ஒருவரான திருநாவுக்கரசர் (அப்பருக்கு) மடம் ... மேலும்
 
temple news
இந்த வருடம் அக்னி நட்சத்திரம் நாளை மே 4ம்தேதி தொடங்கி மே 28ம்தேதி முடிகிறது.முன்னொரு காலத்தில் சுவேதகி ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி அடுத்த போத்தம்பாளையம் பத்ரகாளியம்மன் கோவிலில் மழை பெய்ய வேண்டி நவ சண்டி ஹோமம் ... மேலும்
 
temple news
பல்லடம்; சொத்து, பணத்தின் மீதுதான் இன்று பெரும்பாலானவர்களுக்கு ஆசை உள்ளது என, சித்தம்பலத்தில் நடந்த ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் ஐயனார் கோயில் வைகாசி விசாகத் திருவிழா விநாயகர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar