Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சித்ரா பௌர்ணமி; திருவண்ணாமலையில் ... தமிழகத்திலேயே 3வது பெரிய தேரான சாரங்கபாணி கோவிலில் சித்திரை தேரோட்டம் தமிழகத்திலேயே 3வது பெரிய தேரான ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பரமக்குடியில் பூ பல்லக்கில் வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்
எழுத்தின் அளவு:
பரமக்குடியில் பூ பல்லக்கில் வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்

பதிவு செய்த நாள்

23 ஏப்
2024
10:04

பரமக்குடி; பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் (அழகர்) கோயில் சித்திரைத் திருவிழாவில் கள்ளழகர் அதிகாலை 3:30 மணிக்கு பூ பல்லக்கில் வைகை ஆற்றில் இறங்கினார்.

பரமக்குடி சவுராஷ்டிரா பிராமண மகா ஜனங்களுக்கு சொந்தமான சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானத்தை சேர்ந்த சுந்தரராஜ பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஏப்.18 காப்பு கட்டுதலுடன் சித்திரை திருவிழா துவங்கியது. இந்நிலையில் நேற்று முன்தினம் காலை பெருமாள் மற்றும் கருப்பணசாமிக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. அன்று நாள் முழுவதும் பல ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்தனர். நேற்று இரவு பெருமாள் கோடாரி கொண்டை இட்டு, தங்க நெல் மணி தோரணங்கள் சூடி, வில், வாள், கத்தி, கேடயம், குத்துவாள், வளரி, தடி ஏந்தி கள்ளழகர் திருக்கோலத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து இரவு 1:00 மணிக்கு மல்லிகை, கனகாம்பரம் என விதவிதமான பூக்கள் கட்டிய பல்லக்கில் அமர்ந்தார். மேலும் 1:30 மணிக்கு தன் ஆஸ்தானத்தை விட்டு வெளியேறிய அழகர் கருப்பணசாமி இடம் விடைபெறும் நிகழ்ச்சி நடந்தது. பக்தர்களின் இடைவிடாத கோவிந்தா கோஷம் முழங்க 3:30 மணிக்கு அழகர் அரக்கு பட்டு உடுத்தி, வெள்ளி கிண்ணத்தில் அவள் பாயாசம் சாப்பிட்டபடி இறங்கினார். இதனால் விவசாயம் நன்கு செழித்து ஊர் மக்கள் நல்ல சுபிச்சத்துடன் இருப்பார்கள் என அர்ச்சகர்கள் தெரிவித்தனர். பின்னர் பல்வேறு மண்டக படிகளில் சேவை சாதித்தபடி அழகர் தல்லாகுளம் மண்டகப்படியை அடைந்தார். பின்னர் காலை 9:00 மணிக்கு குதிரை வாகனத்தில் அலங்காரமாகிய அழகரை தல்லாகுளத்தில் இருந்து பல ஆயிரம் பக்தர்கள் துருத்தி என்னும் பீச்சாங்குழல் மூலம் மஞ்சள் நீரை பீச்சி வரவேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர், தஞ்சாவூர் அருகே களிமேட்டில், 64 நாயன்மார்களில் ஒருவரான திருநாவுக்கரசர் (அப்பருக்கு) மடம் ... மேலும்
 
temple news
இந்த வருடம் அக்னி நட்சத்திரம் நாளை மே 4ம்தேதி தொடங்கி மே 28ம்தேதி முடிகிறது.முன்னொரு காலத்தில் சுவேதகி ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி அடுத்த போத்தம்பாளையம் பத்ரகாளியம்மன் கோவிலில் மழை பெய்ய வேண்டி நவ சண்டி ஹோமம் ... மேலும்
 
temple news
பல்லடம்; சொத்து, பணத்தின் மீதுதான் இன்று பெரும்பாலானவர்களுக்கு ஆசை உள்ளது என, சித்தம்பலத்தில் நடந்த ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் ஐயனார் கோயில் வைகாசி விசாகத் திருவிழா விநாயகர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar