தாயே நீயே துணை; கோவை தண்டு மாரியம்மன் கோயிலில் அக்னி சட்டி எடுத்து பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24ஏப் 2024 10:04
கோவை; கோவையின் குலதெய்வம் என போற்றப்படும் தண்டு மாரியம்மன் கோவில்சித்திரை விழா கடந்த 15ம் முதல் நடந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வான பக்தர்கள் அம்மனுக்கு அக்னி சட்டி எடுக்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் மற்றும் குழந்தைகள் பொதுமக்கள் கையில் அக்னி சட்டையை ஏந்தியபடி கோவை கோனியம்மன் கோவில் வாசலில் இருந்து பெரிய கடை வீதி வழியாக தண்டு மாரியம்மன் கோவிலை வந்தடைந்தனர். ஏராளமான பக்தர்கள் தங்களின் இஷ்ட தெய்வமான தண்டு மாரியம்மனை வணங்கி வழிபட்டனர். இந்த நிகழ்வில் கோவை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் பொள்ளாச்சி, உடுமலை, மேட்டுப்பாளையம், காரமடை, உதகை, குன்னூர் , கூடலூர் ஆகிய பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.