Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திட்டக்குடி திரிபுரசுந்தரி ... பண்ருட்டி பெருமாள் கோவில் தேரோட்டம் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் பங்கேற்பு பண்ருட்டி பெருமாள் கோவில் தேரோட்டம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கருட வாகனத்தில் வந்து மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் அளித்தார் கள்ளழகர்
எழுத்தின் அளவு:
கருட வாகனத்தில் வந்து மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் அளித்தார் கள்ளழகர்

பதிவு செய்த நாள்

24 ஏப்
2024
04:04

மதுரை; மதுரை சித்திரை திருவிழாவில் இன்று தேனூர் மண்டபத்தில் எழுந்தருளிய சுந்தரராஜப் பெருமாள் சுவாமி, மண்டூக முனிவருக்கு சாபம் தீர்த்து காட்சி தந்தருளினார்.

சித்திரைத்திருவிழாவின் ஒருபகுதியாக அழகர்கோவிலில் ஏப்.19ல் திருவிழா துவங்கியது. ஏப்.21 மாலை 6:00 மணிக்கு கோயிலிலிருந்து சுந்தரராஜ பெருமாள் தங்கப்பல்லாக்கில் கண்டாங்கி பட்டு உடுத்தி வேல் கம்புடன் கள்ளழகர் கோலத்தில் புறப்பட்டார். நேற்று முன்தினம் (ஏப்., 22) அதிகாலை மூன்றுமாவடியில் கள்ளழகரை வரவேற்கும் எதிர்சேவை நடந்தது. பின்னர் தல்லாகுளம் பெருமாள் கோயிலில் இரவு சுவாமிக்கு நுாபுரகங்கை தீர்த்தத்தால் திருமஞ்சனம் செய்யப்பட்டது. ஸ்ரீவில்லிப்புத்துார் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை அணிந்துகொண்டு நேற்று அதிகாலை ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளினார். தங்கக்குதிரையில் அதிகாலை 5:35 மணிக்கு வந்த அழகரை வெள்ளி குதிரையில் வீரராகவப்பெருமாள் எதிர்கொண்டு வரவேற்றார். பின்னர் காலை 6:02 மணிக்கு வைகையில் அழகர் எழுந்தருளினார். பின்னர் மதியம் ராமராயர் மண்டபத்தில் தீர்த்தவாரி நடந்தது.

இதைதொடர்ந்து வண்டியூர் வீரராகவபெருமாள் கோயிலில் சுவாமி ஏகாந்த சேவையில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இன்று (ஏப்.,24) காலை 9:00 மணிக்கு சேஷ வாகனத்தில் எழுந்தருளி தேனுார் மண்டபத்திற்கு புறப்பட்டு சென்றார். அங்கிருந்து கருட வாகனத்தில் மதியம் 3:30 மணிக்கு மண்டூக முனிவருக்கு சாபம் தீர்த்து காட்சி தந்தருளினார். இரவு 11:00 மணிக்கு ராமராயர் மண்டபத்திற்கு சென்று அங்கு விடிய, விடிய தசாவதார அலங்காரங்கள் நடக்கின்றன. நாளை (ஏப்.,25) காலை 6:00 மணிக்கு மோகினி அவதாரத்துடன் புறப்பட்டு மதியம் 12:00 மணிக்கு அனந்தராயர் பல்லக்கில் ராஜாங்க அலங்காரத்தில் எழுந்தருளுகிறார். இரவு 11:00 மணிக்கு ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்தில் திருமஞ்சனம் நடக்கிறது. ஏப்.,26 அதிகாலை 2:30 மணிக்கு பூப்பல்லக்கில் கோயிலுக்கு திரும்புகிறார். ஏப்., 27 காலை 10:00 முதல் 11:00 மணிக்குள் இருப்பிடம் சேருகிறார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்,  தஞ்சாவூர் பெரியகோவிலில், பிரதோஷத்தை முன்னிட்டு , மஹா நந்தியம் பெருமானுக்கு சிறப்பு ... மேலும்
 
temple news
புதுச்சத்திரம்; பெரியாண்டிக்குழி பாலமுருகன் கோவிலில் சுவாமி சிலை மீது சூரிய ஒளிபடும் அதிசய நிகழ்வு ... மேலும்
 
temple news
வத்திராயிருப்பு; சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் பங்குனி மாத பிரதோஷ வழிபாடு நடந்தது. இன்று காலை 6:30 ... மேலும்
 
temple news
கோவை; கோவை, சித்தாபுதூர் ஐயப்ப சுவாமி கோவில் 56 -வது ஆண்டு விழா 26.03 - 2025 அன்று கோவில் வளாகத்தில் உள்ள ... மேலும்
 
temple news
திருப்போரூர்; திருப்போரூர் கந்தசுவாமி கோவில் விடையாற்றி உற்சவ நிறைவு விழாவில், பல்வேறு பழங்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar