Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மேட்டுப்பாளையம் குறிஞ்சீஸ்வரர் ... சூலூர் கோவில்களில் பூச்சாட்டு திருவிழா; பக்தர்கள் வழிபாடு சூலூர் கோவில்களில் பூச்சாட்டு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சத்தியமங்கலம் தண்டுமாரியம்மன் குண்டம் விழா; தீ மிதித்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
சத்தியமங்கலம் தண்டுமாரியம்மன் குண்டம் விழா; தீ மிதித்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

பதிவு செய்த நாள்

24 ஏப்
2024
05:04

சத்தியமங்கலம் தண்டுமாரியம்மன் கோவில் குண்டம் விழாவில் ஆயிரக்கணக்கானோர் தீ மிதித்து வழிபாடு செய்தனர்.

ஈரோடு ; தமிழகத்தில் பிரசித்தி பெற்ற பண்ணாரிஅம்மனின் தங்கையாக கருதப்படும் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வடக்கு பேட்டை தண்டுமாரியம்மன் கோவில் குண்டம் விழா ஏப்ரல்.10ல் பூச்சாட்டுதலுடன் துவங்கியது. ஏப்ரல்.11ல் கம்பம் நடப்பட்டது. நாள்தோறும் கம்பத்தை சுற்றியும், ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமிகள், கம்ப ஆட்டம் ஆடினார்கள் .ஏப் 23ல் இரவு அம்மன் அழைத்தல்  நடைபெற்றது. கோவிலின் முக்கிய நிகழ்வான இன்று குண்டம் விழாவையொட்டி வரம் கேட்டல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து பக்தர்கள் படைக்கலம் எடுத்து பவானிஆற்றுக்கு சென்று புனித நீராடி கோவிலுக்கு வந்தனர். கோவில் முன் அமைக்கப்பட்ட 6 அடி நீளமுள்ள குண்டத்திற்கு கற்பூரம் ஏற்றி சிறப்பு பூஜைகள் செய்து கோவில் பூசாரி சரத்  முதலில் குண்டம் இறங்கினார். அவரைத் தொடர்ந்து  பக்தர்கள், பள்ளி மாணவிகள், இளைஞர்கள், பெண்கள் என 2ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்  தீ மிதித்தனர். விழாவையொட்டி தண்டுமாரியம்மன் பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கோவில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. நாளை (ஏப் 25)இரவு வான வேடிக்கையுடன் கம்பம் பிடுங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 26ல் திருவிளக்கு பூஜை,27ல் மஞ்சள் நீராட்டு விழா, நடைபெறுகிறது. அதைதொடர்ந்து அம்மன் சிம்ம வாகனத்தில் திருவீதி உலா வருகிறது. மே2.ல் மறு பூஜையுடன் திருவிழா நிறைவடைகிறது.ஒவ்வொரு நாள் இரவிலும் கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.பாதுகாப்பு பணியில் சத்தியமங்கலம் போலீசார் ஈடுபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவில், பெருமாளின், மங்களாசாசனம் பெற்ற, 108 ... மேலும்
 
temple news
திருவள்ளூர்; திருவள்ளூரில் பழமை வாய்ந்த திரிபுரசுந்தரி சமேத தீர்த்தீஸ்வரர் கோவிலில், பங்குனி ... மேலும்
 
temple news
திருச்சி; ஆழ்வார்களால் பாடப்பெற்றதும், 108 திவ்ய தலங்களுள் ஒன்றானதாகவும் விளங்குவது திருவெள்ளரை ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரியில் மகாமுத்து வராகி அம்மன் கோயில் மண்டலாபிஷேகம் நடந்தது. இக்கோயில் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் மற்றும் உபகோயிலில் கும்பாபிஷேக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar