Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மாமல்லபுரம் ஸ்தலசயனர் கோவிலில் ... காஞ்சி அஷ்டபுஜ பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவக்கம் காஞ்சி அஷ்டபுஜ பெருமாள் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சென்னையில் சித்ரா பவுர்ணமி விழா கோலாகலம்; பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
சென்னையில் சித்ரா பவுர்ணமி விழா கோலாகலம்; பக்தர்கள் பரவசம்

பதிவு செய்த நாள்

24 ஏப்
2024
05:04

சென்னை; சித்ரா பவுர்ணமி தினமான நேற்று, சென்னை மற்றும் புறநகரில் உள்ள அம்மன் கோவில்களில், பால் குடம் எடுத்தல், திருவிளக்கு பூஜை, சிறப்பு அபிஷேக ஆராதனை, சித்திரைக் கஞ்சி வார்ப்பு ஆகியவை நடந்தன.

சிவாலயங்களிலும், பெருமாள் கோவில்களிலும் சிறப்பு அபிஷேகங்கள், வழிபாடு, வீதி ஊர்வலங்கள் நடத்தப்பட்டன. முண்டகக்கண்ணி அம்மன் கோவிலில், 1,008 பக்தர்கள் பால் குடம் எடுக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. ஹிந்து மத நம்பிக்கைபடி, ஒவ்வொருவரும் செய்யும் புண்ணிய, பாவங்களை கணிப்பவர், சித்திர புத்திரனார். நேற்று அவரின் அவதார திருநாள் என்பதால், பல கோவில்களில், சித்திரகுப்த பூஜை நடத்தப்பட்டது. மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு கபாலீஸ்வரருக்கு மரிக்கொழுந்து சார்த்தும் நிகழ்வு நடந்தது. மேலும், கோலவிழி அம்மனுக்கு பூச்சொரிதல் விழா நடந்தது. சென்னையில் வசிக்கும் வெளி மாவட்டங்களை சேர்ந்த மக்கள், நேற்று மாலை தங்கள் குடும்பத்தார், உறவினர்கள், நண்பர்களுடன் சென்னை, மெரினா, எலியாட்ஸ் கடற்கரையில் அமர்ந்து நிலாச்சோறு சாப்பிட்டு மகிழ்ந்தனர். l தண்டையார்பேட்டை, அருட்கோட்டம் முருகன் கோவிலில் 57ம் ஆண்டு சித்ரா பவுர்ணமி விழா, வெகு விமரிசையாக நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடி மற்றும் பால்குடம் ஏந்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும் பக்தர்கள் பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்ப காவடி, செல்லா காவடி, பறவைக் காவடி மற்றும் குழந்தை பாக்கியம் வேண்டி கரும்பால் தொட்டில் கட்டி காவடி எடுத்து 5 கி.மீ., ஊர்வலமாக வந்தனர். திருவிழாவை காண பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான, பொதுமக்கள் திரண்டதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.  மேடவாக்கம் அடுத்த பெரும்பாக்கம், வனத்துறை குடியிருப்பில் ஸ்ரீ பவானி அம்மன் உடனுறை ஸ்ரீ பவானி சங்கர் கோவில் உள்ளது. இங்கு சித்ரா பவுர்ணமி விழா, நேற்று காலை வெகுவிமரிசையாக நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கீழக்கரை; ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே கோயில் விழாவில் கொதிக்கும் நெய்யில் கைகளால் பலகாரம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலையில், புரட்டாசி மாத பவுர்ணமியையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; உலக புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரியகோவிலில், பவுர்ணமி நாளில் கிரிவலம் நடைபெற்று வந்தது. ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் கடந்த ஐந்து நாட்களாக தேவஸ்தானத்தில் ... மேலும்
 
temple news
கோவை; ஒவ்வொரு மாதத்திலும் வரும் பவுர்ணமி திதி சிறப்புக்குரியதாகும். ஆனால் பவுர்ணமி வரும் மாதங்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar