Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சென்னையில் சித்ரா பவுர்ணமி விழா ... திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் கோவில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவக்கம் திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சி அஷ்டபுஜ பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
காஞ்சி அஷ்டபுஜ பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவக்கம்

பதிவு செய்த நாள்

24 ஏப்
2024
05:04

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசல் கொண்ட ஒரே கோவிலான அஷ்டபுஜ பெருமாள் கோவில், பெருமாள் 108 திவ்யதேசங்களில் ஒன்றாக திகழ்கிறது. இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் பிரம்மோற்சவம் 10 நாட்கள் விமரிசையாக நடைபெறும்.

கொரோனா ஊரடங்கு மற்றும் கும்பாபிஷேகத்தையொட்டி கோவிலில் நடந்த திருப்பணி காரணமாக, மூன்று ஆண்டுகளாக பிரம்மோற்சவம் நடைபெறவில்லை. இந்நிலையில், 2 கோடி ரூபாய்க்கு மேல் திருப்பணிகள் செய்யப்பட்டு, கடந்த பிப்.,26ம் தேதி கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது. அதை தொடர்ந்து நடப்பு ஆண்டுக்கான பிரம்மோற்சவம் நேற்று காலை, கொடியேற்றத்துடன் துவங்கியது. உற்சவத்தையொட்டி, நேற்று, காலை 7:15 மணிக்கு கோவில் கொடிமரத்திற்கு பல்வேறு பூஜைகள் செய்யப்பட்டு கருடாழ்வார் படத்துடன்கூடிய கொடி ஏற்றப்பட்டு மஹா தீபாராதனை நடந்தது. அதை தொடர்ந்து கோவில் அலங்கார மண்டபத்தில் ஸ்ரீதேவி, பூதேவியருடன் உற்சவர், ஆதிகேசவப் பெருமாள் வெங்கடாத்திரி கொண்டை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து, வீதியுலா வந்தார். மாலை சிம்ம வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வந்தார். தினமும், காலை 6:00 மணிக்கும், மாலை 6:00 மணிக்கும் சுவாமி பல்வேறு வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வருவார். அதன்படி மூன்றாம் நாள் உற்சவமான நாளை காலை கருடசேவை உற்சவமும், இரவு ஹனுமந்த வாகனமும், 29ல் காலை தேரோட்டமும் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாட்டை கோவில் அறங்காவலர் குழு தலைவர் சந்தோஷ்குமார், செயல் அலுவலர் பூவழகி, தீர்த்தகாரர்கள், உபயதாரர்கள் இணைந்து செய்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: மாசி பவுர்ணமியை முன்னிட்டு, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருச்செந்தூர்; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசி திருவிழா 11ம் நாளான நேற்று இரவு தெப்ப ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி கருணாம்பிகை உடனமர் லிங்கேஸ்வரர் மூலவர் மீது சூரிய ஒளி விழும் அற்புத காட்சியை ஏராளமான ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்; காரமடை அரங்கநாதர் கோவிலில், தேர் திருவிழாவை முன்னிட்டு, நடந்த தீபந்த சேவையில் ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் திருப்பட்டினத்தில் நடந்த மாசிமக விழாவில் 6பெருமாள்கள் தீர்த்தவாரியில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar