Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காஞ்சி அஷ்டபுஜ பெருமாள் கோவிலில் ... 7ம் நுாற்றாண்டு பல்லவர் கால சிலை கண்டெடுப்பு 7ம் நுாற்றாண்டு பல்லவர் கால சிலை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் கோவில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் கோவில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவக்கம்

பதிவு செய்த நாள்

24 ஏப்
2024
05:04

மாமல்லபுரம்:திருவிடந்தை, நித்ய கல்யாண பெருமாள் கோவிலில், சித்திரை பிரம்மோற்சவ விழா, கொடியேற்றத்துடன் துவங்கியது. மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தையில், ஹிந்து சமய அறநிலைய மற்றும் தொல்லியல் ஆகிய துறைகளின் கீழ், நித்ய கல்யாண பெருமாள் கோவில் பிரசித்திபெற்றது. 108 வைணவ திவ்விய தேசங்களில் ஒன்று.

மூலவர் ஆதிவராக பெருமாள், அகிலவல்லி தாயாருடன் வீற்றுள்ளார். திருமண தடை, ராகு - கேது தோஷ பரிகார சிறப்பு பெற்றது. இக்கோவில் சித்திரை பிரம்மோற்சவ விழா, நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று முன்தினம் இரவு, அங்குரார்ப்பணம் வழிபாடு நடந்தது. நேற்று காலை, நித்ய பூஜைக்கு பின், உற்சவர் நித்ய கல்யாண பெருமாள், தேவியருடன், தோளுக்கு இனியான் சேவையில் மஹா மண்டபத்தில் எழுந்தருளி சிறப்பு வழிபாடு நடந்தது. பின், 6:30 மணிக்கு, அவர் ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளினார். அவர், கொடிமரத்திற்கு வேதமந்திரங்கள் முழங்கி வழிபாடு நடைபெற்று, 07:00 மணிக்கு கொடியேற்றப்பட்டது. பின், சுவாமி சக்கரத்தாழ்வாருடன் வீதியுலா சென்றார். மாலை திருமஞ்சனம் நடந்து, இரவு, சுவாமி அன்னவாகன சேவையாற்றி, வீதியுலா சென்றார். பக்தர்கள் சுவாமியை தரிசித்து வழிபட்டனர். ஆளவந்தார் அறக்கட்டளை நிர்வாகம், நேற்றைய உற்சவங்களை கட்டளை உபயமாக நடத்தினர். மே 2ம் தேதி வரை, தினசரி காலை, இரவு, உற்சவம் நடக்கிறது. ஐந்தாம் நாள் உற்சவமாக, வரும் 27ம் தேதி, சுவாமி கருட வாகன சேவையாற்றுகிறார். ஏழாம் நாளான வரும் 29ம் தேதி, திருத்தேரில் சுவாமி உலா செல்கிறார். மே 2ம் தேதி, தெப்போற்சவம் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
குன்றத்துார்; சோமங்கலத்தில் உள்ள சுந்தரராஜ பெருமாள் கோவிலில், இன்று கருட சேவை உற்சவம் விமரிசையாக ... மேலும்
 
temple news
திருச்செந்தூர்; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நான்காம் ... மேலும்
 
temple news
அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வரும் ஜூலை 14ல் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
திருபுவனை; சன்னியாசிக்குப்பம் சப்த மாதா கோவிலில் வாராகி அம்மன் ஆஷாட நவராத்திரி விழாவின் 7வது நாளான ... மேலும்
 
temple news
திருப்புத்துார்; திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் ஆனி திருமஞ்சனத்தை முன்னிட்டு நடராஜர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar