Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் ... ஆட்சீஸ்வரர் – இளங்கிளி அம்மன் கோயிலில் சித்திரை பிரமோற்சவம்; சந்தனகாப்பு அலங்காரத்தில் சுவாமி ஆட்சீஸ்வரர் – இளங்கிளி அம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சிபுரம் சித்ரகுப்த சுவாமி கோவிலில் சித்ரா பவுர்ணமி உற்சவம்
எழுத்தின் அளவு:
காஞ்சிபுரம் சித்ரகுப்த சுவாமி கோவிலில் சித்ரா பவுர்ணமி உற்சவம்

பதிவு செய்த நாள்

24 ஏப்
2024
06:04

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகில், பழைய நெல்லுக்கார தெருவில் கர்ணகி அம்பாள் சமேத சித்ரகுப்த சுவாமி கோவில் அமைந்துள்ளது.

கேது திசை, புத்தி, அந்தரம் மற்றும் கேதுவினால் வரும் தோஷங்கள் பூர்வ ஜென்ம பாவங்கள், தடைபடும் திருமணம், குழந்தைபேறு கிடைக்க, மனக்குழப்பம் அகல சித்ரகுப்தர் துணைபுரிகிறார். ஆயுள் பாவ தோஷங்கள், கடன்கள், வழக்குகள் போன்றவை நீங்க சித்ரகுப்தரை பக்தர்கள் வழிபடுகின்றனர். இவ்வாறு பல்வேறு சிறப்பு பெற்ற காஞ்சிபுரம் சித்ரகுப்த கோவில் ஹிந்து சமய அறநிலையத் துறை வாயிலாக நிர்வாக திட்டப்படி கருணீகர் குலத்தில் இருந்து அறங்காவலர்கள் நியமனம் செய்யப்பட்டு சிறப்பாக நிர்வாகம் செய்யப்படுகிறது. நடப்பு ஆண்டுக்கான சித்ரா பவுர்ணமி மற்றும் திருக்கல்யாண உற்சவம் நேற்று முன்தினம் துவங்கியது. விழாவையொட்டி நேற்று முன்தினம், இரவு 9:30 மணிக்குள் திருக்கல்யாண வைபவம் விமரிசையாக நடந்தது. தொடந்து சுவாமி வீதியுலா நடந்தது. நேற்று, காலை 4:00 மணிக்குள் ஸ்தபன ஹோமபூஜையும், காலை 5:30 மணியில் இருந்து இரவு 10:00 மணி வரை சித்ரா பவுர்ணமி சிறப்பு தரிசனம் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள், அதிகாலையில் இருந்தே நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாட்டை காஞ்சிபுரம் ஹிந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் இரா.வான்மதி, உதவி ஆணையர் பொ.லஷ்மிகாந்த பாரதிதாசன், அறங்காவலர் குழு தலைவர் கே.எம்.ரகுராமன், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் தே.சந்தானம், ரா.ராஜாமணி, கோவில் செயல் அலுவலர் மா.அமுதா, கோவில் அர்ச்சகர், பணியாளர்கள் மற்றும் உபயதாரர்கள் இணைந்து செய்திருந்தனர். காஞ்சிபுரம் டி.எஸ்.பி., முரளி தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவாலயங்களில் நடராஜருக்கு நடத்தப்பெறும் அபிஷேக விழாக்களில் சிறப்பான விழாக்கள் இரண்டு. ஒன்று ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; தஞ்சை பெரியகோவிலில் ஆஷாட நவராத்திரி விழாவையொட்டி இன்று நவதானிய அலங்காரத்தில் வராஹி ... மேலும்
 
temple news
தூத்துக்குடி ; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் குடமுழுக்கையொட்டி இன்று மாலை தொடங்கும் ... மேலும்
 
temple news
விருத்தாசலம் ; சஷ்டியை ஒட்டி விருத்தாசலம் மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் கோவிலில் முருகப்பெருமான் ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; ராஜவல்லிபுரம் செப்பறை அழகிய கூத்தர் கோவிலில் ஆனி தேரோட்டம் இன்று விமரிசையாக நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar