Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பாலக்கரை பகவத் விநாயகர் கோவிலுக்கு ... கொங்கலக்குறிச்சி செல்லாண்டியம்மனுக்கு சிறப்பு அபிஷேக பூஜை கொங்கலக்குறிச்சி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் சித்ரா பவுர்ணமி விழா; வெயிலில் பக்தர்கள் அவதி
எழுத்தின் அளவு:
தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் சித்ரா பவுர்ணமி விழா; வெயிலில் பக்தர்கள் அவதி

பதிவு செய்த நாள்

26 ஏப்
2024
11:04

கோவை, கோவை, மதுக்கரை தர்மலிங்கேஸ்வரர் கோவி லில் சித்ராபவுர்ணமி விழா விமரிசையாக நடந்தது. சித்ராபவுர்ணமி விழா, மஹாகணபதி ஹோமத்துடன் துவங்கியது. காலை 6:00 மணிக்கு சிவகாமி யம்மை உடனமர் சந்திர சேகரருக்கு திருமஞ்சன பலர் மும், லட்சார்ச்சனை துவங்கியது. வெள்ளிக்கவசம் அணி விக்கப்பட்டு சிறப்பு மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு சுவாமி அருட்காட்சி அளித்தார். பக்தர்கள் கிரிவலம் வந்தும், மலை ஏறியும் சுவாமியை தரிசித்தனர். மாலை 3:00 மணிக்கு ஒயிலாட்டம் மற்றும் கும்மியாட்டம் நடந்தது. தொடர்ந்து திருமுறை பாராயணத்துடன் தர்ம லிங்கேஸ்வரருக்கு மஹா அபிஷேகம் நடந்தது.

வெயிலில் பக்தர்கள் அவதி; சித்ரா பவுர்ணமியை யொட்டி, கோவிலில் பக்தர்களுக்கு சிறப்பு வசதிகள் செய்யப்பட்டிருந்தது. கிரிவலப்பாதையில் பல இடங்களில் தண்ணீர், நீர் மோர் வழங்கப்பட்டது. காலை முதல் மாலை வரை பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. காலை 10 மணி முதலே வெயில் கொளுத்த துவங்கியது. கிரிவலம் சென்ற பக்தர்கள் பலர் செருப்பு அணி யவில்லை. நேரம் ஆக, ஆக நிலத்தின் சூடு தாங்காமல் அவதிப்பட்டனர். மரங்களும் காய்ந்து கிடப்பதால், நிழலில் ஒதுங்க முடியாமல் பக்தர்கள் தவித்தனர். இளம் பெண்கள் தாங்கள் அணிந்திருந்த துப்பட்டாவை கழற்றி போட்டு அதன்மேல் நின்றது பரிதாபமாக இருந்தது. சிலர் காலில் துணிகளை சுற்றிக்கொண்டு நடந்தனர். நடந்து செல்லும் பாதையில் இடையிடையே கார்பெட் வசதி, கூடுதல் இடங்களில் சாமியானா அமைத்திருந்தால் வசதியாக இருந்திருக்கும். பக்தர்கள் சிரமப்பட்டதை அறிந்து, செருப்பு அணிந்து கிரிவலம் செல்லலாம் என ஒலிபெருக்கியில் தாமதமாக அறிவிப்பு வெளியிட்டனர். வரும் ஆண்டுகளில் கோவில் நிர்வாகம் இது போன்ற விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என பக்தர்கள் தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி; பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் பக்தர்கள் அதிகளவில் வருகை புரிந்தனர்.பழநி கோயிலில் கோடை விடுமுறை நாளை ... மேலும்
 
temple news
சாயல்குடி; அக்னி நட்சத்திரத்தின் தாக்கம் வருகிற மே 29 வரை நீடிக்கிறது. சுட்டரிக்கும் கத்திரி ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் பூமாயி அம்மன் கோயிலில் வசந்தப் பெருவிழாவை முன்னிட்டு பெண்கள் ... மேலும்
 
temple news
திருப்பதி;  திருமலையில் உள்ள நாதநீராஜனம் தலத்தில் உலக நன்மைக்காக  பெருமாளை வேண்டி இன்று காலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar