Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பந்தலூர் கோவில் திருவிழாவில் ... கூழமந்தலில் சித்திரை பெருவிழா விமரிசை; ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் கூழமந்தலில் சித்திரை பெருவிழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பொன்னேரியில் ஹரி – ஹரன் சந்திப்பு உற்சவம் விமரிசை; பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
பொன்னேரியில் ஹரி – ஹரன் சந்திப்பு உற்சவம் விமரிசை; பக்தர்கள் பரவசம்

பதிவு செய்த நாள்

29 ஏப்
2024
11:04

பொன்னேரி; பொன்னேரி, திருஆயர்பாடியில் உள்ள சவுந்தர்யவல்லி தாயார் சமேத கரிகிருஷ்ண பெருமாள் கோவில் சித்திரை பிரம்மோற்சவ விழா, கடந்த 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, சிம்மவாகனம், சூரியபிரபை, சந்திரபிரபை, அனுமந்த வாகனம், புன்னவாகனம், சேஷவாகனம், அன்னவாகனம் ஆகிய உற்சவங்களும், திருவீதி உலாவும் நடைபெற்றன. விழாவின் ஐந்தாம் நாளான நேற்று முன்தினம் காலை நாச்சியார் திருக்கோலம், மாலையில் ஊஞ்சல் சேவை உற்சவங்கள் நடந்தன. பொன்னனேரி அகத்தீஸ்வர பெருமானும், கரிகிருஷ்ண பெருமானும், ஒருசேர சந்தித்து பக்தர்களுக்கு காட்சி தரும் சந்திப்பு திருவிழா’ நள்ளிரவு 12:00 மணிக்கு துவங்கியது. விடிய விடிய சந்திப்பு உற்சவ விழா விமரிசையாக நடந்தது. நேற்று அதிகாலை 5:00 மணிக்கு கருட வாகனத்தில் புறப்பட்ட கரிகிருஷ்ணபெருமாள், ஹரிஹரன் பஜார் வீதியில், தேரடி முனையில் நிலை கொண்டார். மறுமுனையில் பஞ்சமூர்த்திகளுடன் சேஷவாகனத்தில் அகத்தீஸ்வரர் பெருமான் வீற்றிருந்ததார். மங்கள வாத்தியங்கள் முழங்க, அகத்தீஸ்வரர் மற்றும்
கரிகிருஷ்ண பெருமாளுக்கு தாம்பூலங்கள் மாற்றப்பட்டு, பட்டாச்சாரியர்கள், சிவாச்சாரியர்கள் வேத மந்திரங்கள் ஓத, கற்பூர தீபாராதனைகள் காட்டப்பட்டன. வாண வேடிக்கைகள் பக்தர்களை மெய்சிலிர்க்க செய்தன. நேற்று காலை 6:00 மணிக்கு, கரிகிருஷ்ண பெருமாள், அகத்தீஸ்வரர் இருவரும் ஒரே சமயத்தில் எழுந்தருளி, கோதண்டராமன் சன்னிதியில், பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள அகத்திய பரத்வாஜ முனிவர்களின் முன்னிலையில் சந்தித்து ஒருசேர பக்தர்களுக்கு காட்சிஅளித்தனர். ஹரியும், ஹரனும் சந்தித்த போது, கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், ‘ஓம் நமசிவாயா... ஓம் நமோ நாராயணா ... கோவிந்தா... கோவிந்தா’என பக்திப்பரவசத்துடன் கோஷங்களை எழுப்பினர். இதை அடுத்து, அகத்தீஸ்வரர் பஞ்சமூர்த்திகளுடனும், கரிகிருஷ்ண பெருமாளும் மாட வீதிகள்வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்திரை அஷ்டமியை முன்னிட்டுகால பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் மதகடி, வேம்படி மாரியம்மன் கோவிலில் 30ம் ஆண்டு சித்திரை திருவிழா நடந்தது. ... மேலும்
 
temple news
திருவொற்றியூர்; திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவில், 2,000 ஆண்டுகள் பழமையானது. ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்; மதுரையில் நடக்கும் முருக பக்தர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு, கோவை அருகே கேரள ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள உடையவர் சன்னிதி, தமிழக அரசின், 2023 – -24ம் ஆண்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar