வேலாயுதம்பாளையம்: புகழிமலை பாலசுப்ரமண்ய ஸ்வாமி கோவிலில் ஐப்பசி மாத கிருத்திகை விழா நடந்தது.உச்சி கணபதி, பாலசுப்ரமண்ய ஸ்வாமிக்கு, சிறப்பு அபிஷேகம் மற்றும் மஹா தீபாராதணை நடந்தது. பாலசுப்ரமணிய ஸ்வாமிக்கு சந்தனக் காப்பு அலங்காரம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ஸ்வாமியை வழிப்பட்டனர். புன்னம் பாலமலை முருகன் கோவில், வெண்ணமலை பாலசுப்பிரமணிய ஸ்வாமி, வேலாயுதம்பாளையம் ஐயப்பன், செந்தில் ஆண்டவர் ஸ்வாமிக்கும் சிறப்பு பூஜைகள் நடந்தது.