சோழவந்தான் திரவுபதி அம்மன் கோயிலில் திருக்கல்யாணம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16மே 2024 12:05
சோழவந்தான், சோழவந்தான் திரவுபதி அம்மன் கோயில் பூக்குழி விழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்வான திரவுபதி, அர்ச்சு னன் மகாராஜா திருக்கல்யாணம் நேற்று நடந்தது. முன்னதாக யாகசாலை பூஜைகள் மற்றும் சீர்வரிசை எடுத்து வரும் நிகழ்வு நடந்தது. பக்தர்களுக்கு அன் னதானம் வழங்கப்பட்டது. மாலை 6:00 மணிக்கு அம்மன், சுவாமி திருவீதி உலா சென்றனர். மே 22 மாலை 5:00 மணிக்கு மந்தை திடலில் பூக்குழி விழா நடைபெறும்.