திற்பரப்பு; வாள்வச்சகோஷ்டம் மகிஷாசுரமர்த்தினி கோவில் வைகாசி திருவிழாவில் இன்று (16ம்தேதி) சூலினி துர்க்கா ஹோமம் நடக்கிறது. வாள்வச்சகோஷ்டம் மகிஷாசுரமர்த்தினி கோவிலில் வைகாசி திருவிழா கடந்த 13ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. மூன்றாம் நாள் விழாவான நேற்று காலை ஆயில்ய பூஜை நடந்தது. இரவு ஓட்டம் துள்ளலை தொடர்ந்து சமய மாநாடு நடந்தது. இன்று (16ம் தேதி) காலை 8 மணிக்கு சூலினி துர்க்கா ஹோமம், இரவு கலை நிகழ்ச்சி நடக்கிறது. இக்கோவிலில் மாதந்தோறும் மகம் நட்சத்திர நாளில் சூலினி துர்க்கா ஹோமம் நடப்பது சிறப்பாகும். நாளை (17ம் தேதி) மாலை 4 மணிக்கு சுமங்கலி பூஜை , இரவு 8 மணிக்கு பலே நிகழ்ச்சி நடக்கிறது. 18ம் தேதி இரவு பக்தி இன்னிசையை தொடர்ந்து மகளிர் மாநாடு நடக்கிறது. 19ம் தேதி காலை 8.30க்கு உற்சவ பலி, மாலை 6.30க்கு முழுக்காப்புடன் தீபாராதனை, இரவு 7 மணிக்கு மகளிர் மாநாடு நடக்கிறது. 21ம் தேதி மாலை 3மணிக்கு குன்னம்பாறை வன சாஸ்தா கோவிலில் இருந்து தாலப்பொலி எழுந்தருளல், 6.30க்கு திருவாபரணம் சார்த்தி அலங்கார தீபாராதனை , இரவு 8 மணிக்கு பரத நாட்டியம், 11.45 மணிக்கு பள்ளி வே ட்டை , 22ம் தேதி காலை ஆறாட்டுடன் விழா நிறைவு அடைகிறது.