சீதை பிறந்த சீதாமர்ஹி நகரில் சீதைக்கு பிரம்மாண்ட கோயில் : அமித் ஷா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16மே 2024 05:05
பிஹார்; பிஹாரில் சீதாமர்ஹி நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய அமித் ஷா, இங்கு சீதைக்கு பிரம்மாண்ட கோயில் கட்டுவோம் என்று கூறினார்.
சீதாமர்ஹி நகர் தேர்தல் பொதுக்கூட்டத்தில் அமித் ஷா கூறியதாவது; பிரதமர் மோடி அயோத்தியில் ராம் லல்லா கோவிலை கட்டியுள்ளார். அந்த பணி முடிந்தது. இப்போது மா சீதா பிறந்த இடத்தில் பிரமாண்ட கோவில் கட்டுவதுதான் எஞ்சியுள்ளது. ராம் லல்லா கோவிலில் இருந்து தங்களை ஒதுக்கி வைத்தவர்களால் இதை செய்ய முடியாது. தியாகம் மற்றும் தவத்திற்கு பெயர் பெற்ற மா சீதைக்கு, சீதை பிறந்த இடத்தில் பிரமாண்ட கோவிலை யாராவது கட்ட முடியும் என்றால் அது நரேந்திர மோடியும் பாரதிய ஜனதா கட்சியும் தான். உலகத்தின் அனைவரையும் ஈர்க்கும் ஒரு பிரமாண்டமான கோவிலாக அது இருக்கும். இவ்வாறு அமித் ஷா பேசினார். அயோத்தியில் ராமர் கோவிலை தொடர்ந்து, சீதா தேவி கோயில் கட்டுவோம் என அமித் ஷா பேசி இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.