பொன்னை; வேலுார் மாவட்டம், காட்பாடி அடுத்த வள் ளிமலையில், தொல்லியல் துறை சார்பில் நடத் தப்பட்ட ஆய்வில், இரண்டு கல்வெட்டுகள் கண் டுபிடிக்கப்பட்டன. அவை, 10ம் நூற்றாண்டின் ராட்டிரகூடர் மன்னர், 3ம் கிருஷ்ண கன்னர தேவ னின் கல்வெட்டுகள். அவற்றை மத்திய தொல்லியல் துறை கல் வெட்டு பிரிவு இயக்குனர் முனிரத்தினம் தலை மையிலான அதிகாரிகள், வேலுார் கோட்டையி லுள்ள தொல்லியல் துறை அருங்காட்சியகத்திற்கு எடுத்துச்சென்று நேற்று ஆவணப்படுத்தினர். இக்கல்வெட்டுகள் தமிழ், கன்னடம் மொழி களில் உள்ளன. காஞ்சிபுரத்தில் நடந்த விகட சக் கரம் என்ற நிகழ்ச்சி குறித்தும், சோழ இளவரசன் ராஜாத்தியனை பற்றியும், இக்கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.