காளஹஸ்தி சிவன் கோவிலில் குரு தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16மே 2024 05:05
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம், பிரசித்தி பெற்ற ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் தெற்கு நோக்கி வீற்றிருக்கும் குரு தட்சிணாமூர்த்திக்கு இன்று வியாழக்கிழமை என்பதால் பால், தயிர், மஞ்சள், குங்குமம், சந்தனம், பன்னீர், இளநீர் , பஞ்சாமிர்தம் போன்ற பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மேதா குருதட்சிணாமூர்த்தி சுவாமிக்கு தீப தூபம் சமர்பிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கோயில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு தாரக சீனிவாசுலு, கோவில் ஆய்வாளர் ஹரி யாதவர் கோவில் கண்காணிப்பாளர் நாகபூஷணம் யாதவ் மற்றும் கோவில் அலுவலர்கள், பணியாளர்கள் உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு குருதட்சிணாமூர்த்தி சுவாமியை தரிசனம் செய்தனர்.