பதிவு செய்த நாள்
19
மே
2024
08:05
சென்னை; வடபழனி ஆண்டவர் கோவில், வைகாசி விசாக பிரம்மோற்சவ விழாவில் இன்று முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம்; அரோகரா கோஷத்துடன் கோலாகலமாக நடைபெற்றது.
வடபழனி ஆண்டவர் கோவிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு, 10 நாள் பிரம்மோற்ச வம் கடந்த, 13ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று முதல் தினமும் சுவாமி பல்வேறு வாகனங்களில் காலை, மாலை வீதி உலா வந்து அருள்பாலித்து வருகிறார். பிரம்மோற்சவத்தின் பிரதான நாளான, இன்று 19ம் தேதி காலை தேரோட்டம் துவங்கியது. அரோகரா கோஷத்துடன் ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்தனர். இரவு ஒய்யாளி உற்சவம் நடக்கிறது. குதிரை வாகன புறப் பாடு, 20ம் தேதி நடக் கிறது. 21ம் தேதி இரவு 7:00 மணிக்கு, வடபழனி ஆண்டவர் வீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். வைகாசி விசாகமான, 22ம் தேதி காலை 9:00 மணிக்கு வள்ளி, தேவ சேனா சமேத சண்முகர் விதி உலா நடக்கிறது. காலை 10:00 மணிக்கு தீர்த்தவாரி உற்சவ மும், கலசாபிஷேகமும் நடக்கிறது. மாலை 6:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், மயில் வாகனத்தில் புறப் பாடு நடக்கிறது. பின். சுப்பிரமணியர் வீதி உலாவை அடுத்து, கொடியிறக்கத்துடன் பிரம்மோற்சவம் நிறைவு பெறுகிறது.