பதிவு செய்த நாள்
19
மே
2024
11:05
திருவொற்றியூர்:திருவொற்றியூர், காலடிப்பேட்டை, ஸ்ரீ கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில், வைகாசி பிரமோற்சவ விழா, நாளை காலை 4:00 - 5:30 மணிக்குள், கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இரவு, ஸ்ரீ தேவி - பூதேவி சமேதராக உற்சவர் பவள வண்ண பெருமாள், சந்திரபிரபையில் எழுந்தருளி மாடவீதி உலா வருவார். முக்கிய நிகழ்வான, கருடசேவை, 22ம் தேதி காலை, 5:30 மணிக்கு ; திருத்தேரோட்டம், 26ம் தேதி காலை, 6:00 மணிக்கு ; 28 ம் தேதி காலை, 7:00 மணிக்கு, தீர்த்தவாரி பல்லக்கு, இரவு, கொடியிறக்கம் நடைபெறும். தவிர, மே, 30ம் தேதி முதல், ஜூன், 3ம் தேதி வரை, விடையாற்றி உற்சவம் நடக்க உள்ளது.