அயோத்தி புனித தீர்த்தத்துடன் இலங்கை சீதா தேவி கோவிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21மே 2024 10:05
இலங்கை; இலங்கை அசோகவனத்தில் உள்ள சீதா தேவி கோவிலில் கடந்த ஞாயிற்று கிழமை மஹா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.
சீதா தேவி கோவிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு முன்னதாக, 17ம் தேதி கிரியாரம்பம் காலை 8.00 மணிமுதல் காலை கர்மாரம்பம், தீர்த்தம், கிரகப் பிரதர்ஷணம், சாந்திகள், பூர்வாங்க கிரியைகள் மாலை கடகஸ்தாபனம், யாக பூஜை ஹோமம், ஸ்தூபி தீப யந்திர பிம்பஸ்தாபனம் நடைபெற்றது. 18ம் தேதி எண்ணெய்க்காப்பு மற்றும் அயோத்தி புனித சரயு நதியிலிருந்து புனித தீர்த்தக் கலசங்களுடன் காலை 7.00 மணிக்கு பால்குட பவனியும், சுவாமி ஊர்வலமும் நுவரெலியா நகரத்தில் இருந்து ஸ்ரீ சீதையம்மன் ஆலயம் நோக்கி புறப்பாடும் நடைபெற்றது. தொடர்ந்து ஞாயிற்று கிழமை (19.05.2024 ) காலை 9.00 மணி முதல் 11.00 மணிக்கு மஹா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. இதற்காக சென்னை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திருமலை திருப்பதி தேவஸ்தான தமிழ்நாடு அட்வைஸரி கமிட்டி தலைவர் ஜே சேகர் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.