கோவில்பட்டி கைலாசநாதர் - செண்பகவல்லி கோயிலில் திருக்கல்யாணம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21மே 2024 10:05
நத்தம், நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோயில் திருவிழாவில் கைலாசநாதர் - செண்பகவல்லி அம்மன் திருக்கல்யாண உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
நத்தம்-கோவில்பட்டியில் பிரசித்திபெற்ற கைலாசநாதர் - செண்பகவல்லி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் வைகாசி பெருந்திருவிழா கடந்த மே 13-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் தினமும் காலை மற்றும் மாலையில் சுவாமி புறப்பாடு நடந்தது. இதில் அம்மன் சிம்மம், மயில்,பூதம், அன்னம், யானை, ரிஷப வாகனங்களில் எழுந்தருளி கோவில்பட்டி பகுதிகளில் முக்கிய வீதிகள் வழியாக வந்து நகர்வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருவிழாவின் நேற்று கைலாசநாதர் - சமேத செண்பகவல்லி அம்மன் திருக்கல்யாணம் நேற்று மாலை 5.50 மணிக்கு நடைபெற்றது. இதற்காக திருக்கல்யாண மேடை மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.பின்னர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது.இதில் சுற்றுவட்டாரங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனனர். முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் இன்று மே 21 காலை 7 மணிக்கு மணிக்கு மேல் 8.45 மணிக்குள் நடைபெறுகிறது. நாளை பூப்பல்லாக்கு நிகழ்ச்சியும், 23-ம் தேதி காலை உற்சவ சாந்தி விழாவும் நடைபெறுகிறது. இத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகளும், கோவில் நிர்வாகத்தினரும் செய்து வருகின்றனர்.