வெள்ளிக்குறிச்சி முருகன் கோயிலில் வைகாசி விசாக விழா; பக்தர்கள் பால்குடம் எடுத்து வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22மே 2024 03:05
மானாமதுரை; மானாமதுரை அருகே வெள்ளிக்குறிச்சி முருகன் சமேத வள்ளி, தெய்வானை கோவிலில் வைகாசி விசாக விழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் செம்மராயனேந்தல் வைகை ஆற்றிலிருந்து மயில் காவடி,பறவை காவடி, பால்குடம் ஆகியவற்றைப் பாதயாத்திரையாக எடுத்து அபிஷேகம் செய்து சுவாமியை வழிபட்டனர்.
மானாமதுரை அருகே உள்ள வெள்ளிகுறிச்சி கிராமத்தில் முருகன் சமேத வள்ளி, தெய்வானை கோவிலில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு நூற்றுக்கணக்கான பக்தர்கள் வைகாசி விசாகத்தை முன்னிட்டு காப்பு கட்டி விரதத்தை துவங்கினர். இன்று வைகாசி விசாக விழாவை முன்னிட்டு செம்பராயனேந்தல் பகுதி வைகை ஆற்றுக்கு சென்ற பக்தர்கள் அங்கு ஆன்மீக குழு தலைவர் ராமகிருஷ்ணன் தலைமையில் அலகு குத்தி மயில் காவடி,பறவை காவடி,பால் குடங்கள் ஆகியவை சுமந்து கொண்டு கோயிலுக்கு பாதயாத்திரையாக கோயிலை வந்தடைந்தவுடன் முருகன், வள்ளி, தெய்வானை சுவாமிக்கு பால் அபிஷேகம், பூஜை, தீபாராதனை நடந்தது. இதில் வெள்ளிக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அன்னதானம் நடைபெற்றது.மாலை உற்சவர் சுவாமிகள் மயில் வாகனத்தில் வீதாவுலா வந்தனர். வைகாசி விசாக விழாவிற்கான ஏற்பாடுகளை வெள்ளிக்குறிச்சி முருகன் கோவில் பக்தர்கள் ஆன்மீக குழு தலைவர் ராமகிருஷ்ணன் தலைமையில் ஏராளமானோர் செய்திருந்தனர்.