பதிவு செய்த நாள்
22
மே
2024
04:05
சூலூர்; ரங்கநாதபுரம் கே.என்.கே., நகர் ஸ்ரீ தங்க முத்து மாரியம்மன் கோவிலில் இன்று திருக்கல்யாண உற்சவ திருவிழா நடந்தது.
கண்ணம்பாளையம் பேரூராட்சி ரங்கநாத புரம் கே.என்.கே., நகரில் உள்ள ஸ்ரீ தங்க முத்துமாரியம்மன் கோவில் பழமையானது. இங்கு, திருக்கல்யாண உற்சவ திருவிழா, கடந்த, 14 ம்தேதி நோன்பு சாட்டுதலுடன் துவங்கியது. 18 ம்தேதி மாலை கம்பம் நடப்பட்டது. 20ம்தேதி விநாயகர் பொங்கல், கங்கணம் கட்டுதல், பூவோடு வைத்தல் நடந்தது. நேற்று மாலை கும்பம் கொண்டு வருதல், இரவு அம்மை அழைத்தல் நடந்தது. அம்மனுக்கு அலங்காரம் நடந்தது. இன்று அதிகாலை, 4:00 மணிக்கு அம்மனுக்கு திருக்கல்யாணம் நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் மாவிளக்கு, பூவோடு ஏந்தி வந்தனர். பின்னர் பக்தர்கள் பொங்கல் வைத்து நேர்த்தி கடன் செலுத்தினர். அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில், சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். இன்று மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் செய்திருந்தனர்.