அவலுார்பேட்டை; மேல்மலையனுார் அடுத்த தேப்பிரம்பட்டு கிராமத்தில் கூத்தாண்டவர் கோவில் திருவிழா நடந்தது. இக்கோவிலில், சித்திரை திருவிழா கடந்த மாதம் 29ம் தேதி துவங்கியது. தொடர்ந்து 26 நாட்கள் நடக்கும் விழாவில், தினமும் மகாபாரத சொற்பொழிவும், இரவில் 12 நாட்கள் நாடகமும் நடந்தது. நேற்று முன்தினம் காலை துரியோதனன் படுகளமும், தீ மிதி விழாவும், இரவு தேர்திருவிழாவும் நடந்தது. விழாவை முன்னிட்டு கூத்தாண்டவருக்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனையும், சிறப்பு அலங்காரமும் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.